Skip to main content

கட்டுரைப் போட்டியில் கிடைத்த பரிசு தொகையை குளம் சீரமைக்க கொடுத்த பள்ளி மாணவி!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன். அவரது மனைவி சுமதி, மற்றும் அவரது மகள் அனுபிரேமா (15). அனுபிரேமா பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். 8ம் வகுப்பு படிக்கும் போது முதல் கட்டுரைப் போட்டிகளில் அதிகமாக பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். 

 

Schoolgirl who donated the prize money for the essay competition to renovate the pool


2017 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதலமைச்சரிடம் பரிசும், பதக்கமும் பெற்றார். இப்படி பல கட்டுரைப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் முத்துப்பேட்டையில் தமிழ் தாத்தா உ.வே.சா இலக்கிய மன்றம் சார்பில் நடந்த கட்டுரைப் போட்டியில் பேரிடருக்குப் பின் அரசு செய்ய வேண்டிய உடனடி நிவாரணம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதல் பரிசை பெற்றார். அந்த மாணவிக்கு ரூபாய்  3 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது. 

 

Schoolgirl who donated the prize money for the essay competition to renovate the pool


இந்தப் பணத்தை அப்படியே புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 100 நாட்களைக் கடந்தும் நீர் நிலைகளை சீரமைத்து வரும் இளைஞர்களிடம் கொடுத்து, குளங்களை சீரமைக்க இந்த பணத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு இளைஞர் குழுவை கேட்டுக்கொண்டார். மாணவியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட இளைஞர் மன்றத்தினர் மாணவியை பாராட்டினார்கள். 
 

இது குறித்து  மாணவி அனுபிரேமா கூறும் போது, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் உண்டு. பங்கேற்ற போட்டிகளில் பரிசு வாங்கி வருவேன். இந்த நிலையில் தான் கடைசியாக நடந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 3 ஆயிரம் கிடைத்தது. 

 

Schoolgirl who donated the prize money for the essay competition to renovate the pool

 

அந்த பரிசுத்தொகையை பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும் என்பதால் அடுத்த தலைமுறைக்காக தண்ணீரை சேமிக்க, குளங்களை சீரமைத்து வரும் கொத்தமங்கலம் இளைஞர்களிடம் கொடுத்தேன். என்னால் இயன்ற சிறிய உதவியாக என் பரிசு தொகையை கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு வரும் இதேபோல் நீர்நிலைகளை பாதுகாக்க தங்களால் இயன்றதை செய்தால் அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்கும் என்றார். 




 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.