Skip to main content

வேதியியல் ஆய்வகத்தில் பாலியல் தொல்லை... அரசு பள்ளி ஆசிரியரால் பள்ளி மாணவி கர்ப்பம்... ஆசிரியருக்கு வலைவீச்சு!

Published on 06/07/2019 | Edited on 07/07/2019

சேலத்தில் அரசு பெண்கள் பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் உதவி தலைமையாசிரியால் பள்ளிக்கூட ஆய்வகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவி கர்ப்பமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Sexual harassment in a chemical laboratory... School girl pregnancy by government school teacher


சேலத்தில் சேலம்-கோவை நெடுஞ்சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் உதவி தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் பாலாஜி. வேதியியல் ஆசிரியரான இவன் அடிக்கடி தன் வகுப்பில் படிக்கும் மாணவிகளை வேதியியல் ஆய்வகத்திற்கு அழைத்து சென்றுள்ளான். இந்நிலையில் அந்த பள்ளியில் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவர் கார்பம் தரித்ததாக கூறப்படுகிறது.

 Sexual harassment in a chemical laboratory... School girl pregnancy by government school teacher


பள்ளியின் வேதியியல் ஆய்வுகூடத்தில் ஆசிரியர் பாலாஜி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தொடர்ந்து மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர்கள் இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசில் புகாரளிக்க விசாரணை தொடங்கியது. அந்த பள்ளியின் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பெண் காவல் ஆய்வாளர் புஷ்பராணி என்பவர் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் பெற்றுத்தருவதாகவும், இந்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு கருவை கலைக்கும்படி மிரட்டல் விடுத்துள்ளார்.

 

 Sexual harassment in a chemical laboratory... School girl pregnancy by government school teacher


அந்த மாணவி ஏழை குடும்பத்தை சார்ந்தவர் என்பதால் பெண் போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து அந்த ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் பெற்றுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அந்த காமக்கொடூர ஆசிரியரை காப்பாற்ற மாணவிக்கு மிரட்டல் விட்ட பெண் காவல் ஆய்வாளர் குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவகரிடம் புகார் கொடுக்கப்பட்டது.இந்த தகவல் உயர் காவல் அதிகாரிகள் கவனத்திற்கு போக அவர்களின் உத்தரவின்பேரில் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

 Sexual harassment in a chemical laboratory... School girl pregnancy by government school teacher


விசாரணையில் அந்த ஆசிரியர் தலைமறைவானது தெரிய வந்தது. தற்போது மாணவியை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பிய காவல்துறையினர் அந்த காமக்கொடூர ஆசிரியர் மீது பாலியல் பலாத்காரம், போக்ஸோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.

இப்படி மாணவ மாணவிகளுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியரே வேலியே பயிரை மேய்வது போல் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து  கர்ப்பம் வரை சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு'-தலைகுனிய வைத்த சிறுமிகளின் வைரல் வீடியோ!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
shocking video of school girls

திருப்பூரில் பள்ளி கழிவறையைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயின்று வந்த இரண்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை நிர்பந்தித்து கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக  அறிவியல் ஆசிரியை சித்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சிறுமிகள்  பேசி வெளியிடப்பட்ட வீடியோவில், 'யார் ஸ்கூல் பாத்ரூமை சுத்தம் செய்தது; நாங்க ரெண்டு பேரும்தான் பண்ணுவோம். யார் உங்களை பண்ண சொல்வது; எச்.எம் மிஸ், சயின்ஸ் மிஸ். நீங்கள் கழுவ மாட்டேன் எனச் சொல்ல வேண்டியது தானே; சொன்னா திட்டுவாங்க. எதிர்த்தா பேசுறனு குச்சியை எடுத்து வெளுப்பாங்க.  உங்கள் வீட்டில் சொல்ல வேண்டியது தானே; வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு' எனப் பேசும் அந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.