Skip to main content

கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தில் மதிய உணவுக்காக தவிக்கும் பள்ளி குழந்தைகள்...!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை உணவும் வழங்க திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க. எடப்பாடி அரசு அறிவித்துள்ள நிலையில் "ஏப்பா எங்க குழந்தைகளுக்கு மத்தியானம் வழங்கப்படும் ஒரு வேளை சாப்பாட்டாவது கொடுக்க அந்த சாப்பாட்டை தயாரிக்க சமையல்கார பெண்களை இங்கு அனுப்புங்க, அப்புறமா காலை உணவை பற்றி பேசலாம்" என மலை பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

 

School children lunch issue

 



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் புதியதாக தொடங்கப்பட்ட பல தொடக்கப்பள்ளிகளில் சமையலர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளதால் ஆசிரியர்களே தற்காலிகமாக சமையலர் நியமித்து அவர்களே ஊதியம் வழங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தாளவாடி வட்டாரத்தில் கடந்த 2014 ம் ஆண்டு வைத்தியநாதபுரம், செலுமிதொட்டி, ஜே.ஆர்.எஸ்.புரம், அல்லாபுரம் தொட்டி, சோளகர்தொட்டி, தர்மாபுரம் ஆகிய 6 கிராமங்களில் புதியதாக தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டது.

இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டது. ஆனால் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் நியமனம் செய்யபடவில்லை. இதையடுத்து அருகே உள்ள பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள், இந்த பள்ளிகளில் கூடுதல் பொறுப்பு என நியமிக்கப்பட்டுள்ளதால் சத்துணவு அமைப்பாளர்கள் உணவு சமைப்பதற்கான பொருட்களை வழங்கும் பணி மேற்கொண்டு வரும் நிலையில் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும்  சமையலர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

 



பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக சமையலர் நியமித்து பணிகளை மேற்கொள்ளுமாறு தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறியதால் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பில் தற்காலிகமாக சமையலர் நியமித்து உணவு சமைத்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்கி வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் மலைகிராமங்களில் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பில் உள்ளவர்கள் பள்ளிக்கு வழங்கும் ஒத்துழைப்பு மிகவும் குறைவுதான்.

இந்த நிலையில் சமையலருக்கான ஊதியத்தை பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பில் உள்ளவர்கள் வழங்குவதில்லை. இதனால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களே தங்களது கையிலிருந்து சமையலர்களுக்கு ஊதியம் வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மேற்கண்ட பள்ளிகளில் சமையலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைகிராம மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. கல்வியில் புரட்சி செய்கிறேன் என கூறும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் மாவட்டத்தில் தான் இந்த பரிதாப வேண்டுகோள்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.