நெல்லையில் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து தொடர்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் பொருட்காட்சித் திடல் அருகே எஸ்.என்.ஹைரோடுபகுதியில் உள்ளடவுன்சாஃப்டர்தனியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுவர் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விவரங்களைப் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.சுதீஸ்- 6ஆம் வகுப்பு 'சி' பிரிவு,விஷ்வரஞ்சன்- 8ஆம் வகுப்பு 'ஏ' பிரிவு, அன்பழகன் - 9ஆம் வகுப்பு 'பி' பிரிவு என மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தசம்பவத்திற்குவருத்தம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நிவாரணமும் அறிவித்துள்ளார். “இந்ததுயர சம்பவத்தைஅறிந்து மிகுந்தவேதனையுற்றேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கல்” எனதெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய்நிவாரணமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய்நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசெல்விமீதுவழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.கரோனாகாரணமாக 18 மாதங்கள்கழித்து பள்ளி திறக்கப்பட்டபோது பள்ளிகட்டடங்களின்தரம் குறித்து முறையாக ஆராயப்பட்டதாஎன்பது குறித்தும்விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.