Skip to main content

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்த மோசடி கும்பல்! போலீஸ் தீவிர விசாரணை!

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

scam gang  loot six lakh rupee Police serious investigation!

 

சேலம் அருகே, குறைந்த வட்டிக்கு 2 கோடி ரூபாய் கடன் கொடுப்பதாக ஆசை வலை விரித்து கோவை வாலிபர்களிடம் 6 லட்சம் ரூபாயை சுருட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் பரணி (20). இவரும், உள்ளூரைச் சேர்ந்த அவருடைய நண்பர்களான அரவிந்த், முரளி, மற்றும் கார்த்திக் ஆகிய நான்கு பேரும் ஒன்றாக கார் மூலம், சேலம் மாவட்டம் அரியானூருக்கு மார்ச் 18ம் தேதி வந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பரணியை சேர்ப்பதற்காக 6 லட்சம் ரூபாயை எடுத்து வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக ஒரு காரில் வந்த சிலர், அவர்களிடம் ஏதோ ஒரு இடத்தைக்கூறி, அதன் முகவரி குறித்து விசாரித்தனர். திடீரென்று அந்த கும்பல், அரவிந்த் கையில் இருந்த 6 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு காரில் மின்னல் வேகத்தில் தப்பினர்.

 

இச்சம்பவம் குறித்து சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணத்தைப் பறிகொடுத்த கும்பல் முன்னுக்குப் பின்னாகப் பேசினர். காவல்துறையினர் விசாரணையின் போக்கை மாற்றிய பிறகு, அவர்கள் பொய்யான தகவல்களைச் சொல்லி புகார் அளித்திருப்பதாக ஒப்புக்கொண்டனர். அதாவது, புகார்தாரர் தரப்பினர் குறைந்த வட்டிக்கு 2 கோடி ரூபாய் கடன் கிடைக்கும் என்று சிலர் சொன்னதை நம்பி பணத்துடன் சேலம் வந்திருப்பதும், வந்த இடத்தில் மர்ம கும்பலிடம் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, வழிப்பறி செய்து விட்டதாக பொய் புகார் அளித்ததும் தெரிய வந்தது. 


கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு கும்பல், நிதி நிறுவனத்தின் பெயரில், குறைந்த வட்டியில் கடன் தருவதாக பத்திரிகையில் வரி விளம்பரம் செய்துள்ளனர். அதையறிந்த அரவிந்த், முரளி, பரணி, கார்த்திக் ஆகியோர் விளம்பரத்தில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களுக்கு 2 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று கூறியுள்ளனர். எதிர் முனையில் பேசிய கும்பலோ, குறைந்த வட்டியில் கடன் வேண்டுமெனில் கமிஷனாக 6 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசியுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட பிறகே, புகார்தாரர் தரப்பு பணத்துடன் சேலம் வந்திருக்கிறது. 


சேலத்தை அடுத்த அரியானூரில் வைத்து போலி நிதி நிறுவன கும்பல், அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள், சிறிது நேரத்தில் உங்கள் வங்கி கணக்கிற்கு 2 கோடி ரூபாய் பணம் வந்து விடும் என்று சொல்லிவிட்டு காரில் விருட்டென்று பறந்துள்ளனர். ஆனால் சில மணி நேரங்கள் ஆன பிறகும் தங்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து சேராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். 


அதன்பிறகே, பரணி உள்ளிட்ட நான்கு பேரும் அரியானூரில் உள்ள தனியார் கல்லூரியில் கல்விக்கட்டணம் செலுத்த வந்தபோது, மர்ம நபர்கள் பணத்தைப் பறித்துக் கொண்டதாக காவல்துறையில் சரடு விட்டுள்ளனர். பணம் பறித்த கும்பலின் செல்போன் எண், நிகழ்விடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


பத்திரிகையில் வெறும் ஆயிரம் ரூபாய் செலவில் வரி விளம்பரம் கொடுத்து, மர்ம கும்பல் நூதன முறையில் 6 லட்சம் ரூபாயை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.