Advertisment

டுவிட்டரில் ட்ரெண்டாகும் ''சேவ் சுர்ஜித்'' -இறுதிகட்டத்தில் மீட்புப்பணி 

திருச்சி மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தையான சுஜித் வீட்டின் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில்தவறி விழுந்துள்ள நிலையில் தற்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன்தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவிவருகியது.

Advertisment

trend

மதுரையில் இருந்து மணிகண்டன், நாமக்கல்லில் இருந்து டேனியில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர். மதுரையை சேர்ந்தமணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த சிறப்பு குழந்தைமீட்புகருவி மூலம் குழந்தை மீட்கும் பணியில்தீயணைப்பு துறையினர் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு கையில் சுருக்கு கயிறுமாட்டப்பட்ட நிலையில் குழந்தையின் மற்றொரு கையில்சுருக்கு கயிறு மாட்டும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு கைகளிலும் சுருக்கு கயிறு மாட்டப்பட்டவுடன் குழந்தை மேலே தூக்கப்படும் என மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் ''சேவ் சுர்ஜித்'' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் உலக அளவில்ட்ரெண்ட் ஆகிவருகிறது. மேலும் இந்த மீட்பு பணி ஆனது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பத்திரமாக மீட்கப்படும் என தீயணைப்பு துறையினரும்,மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.

child Rescue thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe