Skip to main content

பாதாளச் சாக்கடைப் பணியில் சாத்தூர் நகராட்சி அலட்சியம்!- மண் சரிந்து தொழிலாளர்கள் இருவர் பலி!

Published on 17/07/2022 | Edited on 17/07/2022

 

Chatur Municipality Negligence in Underground Sewer Work!- Two Workers Killed in Landslide!

உயிரின் மதிப்பை உணராத சாத்தூர் நகராட்சி நிர்வாகத்தால், அநியாயமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. 

 

சாத்தூரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கான குழாய்களைப் பதிக்கும் வேலையில், 30- க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த ஒரு வருடமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (16/07/2022) சனிக்கிழமை இரவில், சாத்தூர் நகர் முக்குராந்தலில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டும் பணியை, சின்னசேலம் – குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 7 ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்தனர். பகல் நேரத்தில் வேலை செய்தால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு மக்களுக்கு இடையூறு உண்டாகும் என்பதாலேயே, இரவு நேரத்தில் வேலை பார்த்தனர். 

Chatur Municipality Negligence in Underground Sewer Work!- Two Workers Killed in Landslide!

குழிதோண்டியபோது மண் சரிந்து விழுந்து, தோண்டிய குழிக்குள் சக்திவேல் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு தொழிலாளர்களும் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டனர். உடனே, சாத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்து, சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஜேசிபி மூலம் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, புதைந்த இருவரையும் தீயணைப்புத்துறையினர் சடலங்களாக மீட்டனர். 

 

முதலில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட இருவரது உடல்களும்,  அங்கிருந்து விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது, விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. பாதாளச் சாக்கடைக்கான பணிகள் நடைபெற்ற போது,  உயிர்காக்கும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், இருவர் உயிரிழந்திருக்க மாட்டார்களே? எனக் கேள்வியும் எழுந்துள்ளது. 

 

இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.