Skip to main content

சாத்தான்குளம் சம்பவம்... சி.பி.சி.ஐ.டி.யினரின் வளையத்தில் மேலும் 5 போலீசார்...

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
Sattankulam incident ... 5 more cops in the ring of CBCID

 

சாத்தான்குளத்தில் கொடூர சித்ரவதை காரணமாக, ரணவேதனையை அனுபவித்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை ஜெயராஜூம், மகன் பென்னிக்ஸும் கடந்த ஜூன் 23ம் தேதியன்று மரணமடைந்தனர். இந்தக் கொட்டடிச் சித்ரவதை மரணங்கள் தேசத்தையே உலுக்கியது மட்டுமல்ல உறையவும் வைத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, காவல் விசாரணையை, சி.பி.சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைத்தது. அந்த யூனிட்டின் ஐ.ஜி.யான சங்கர் மற்றும் டி.எஸ்.பி. அனில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்டனர்.

 

Sattankulam incident ... 5 more cops in the ring of CBCID


அதன் விளைவாக இன்ஸ்பெக்டர். ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் முத்துராஜ், குமார் உள்ளிட்ட காவலர்கள் என 5 பேர்கள் கொலை வழக்கான 302ன் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அதுசமயம் காவல் நிலைய பணியிலிருந்த காவலர்கள், தூத்துக்குடியிலுள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் போதிருந்த பென்னிக்ஸின் நண்பர்களும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் நடந்தவைகளை தெரிவித்தனர். அதேசமயம் சம்பவத்தின் போதிருந்த காவலர் தாமஸ், காவல்நிலைய ரைட்டர் ப்யூலா செல்வ குமாரியும் விசாரிக்கப்பட்டார்.

தற்போது எஸ்.எஸ்.ஐ.யான பால்துரை, காவலர்களான சாமதுரை, தாமஸ் மற்றும் வெயிலுமுத்து உள்ளிட்ட 5 போலீசாரை வரவழைத்து அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இன்று விசாரணை நடத்திவருகின்றனர். இவர்களில் தாமஸ் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி.யினரால் விசாரிக்கப்பட்டவர். எஸ்.எஸ்.ஐ.யான பால்துரை அப்ரூவராக மாறலாம் என்ற தகவல்களும் கிளம்பின. இவர்களில் காவலர் சாமதுரை கடந்த வருட குடியரசு தினத்தின்போது சிறந்த காவலர் பணிக்கான விருதினை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தகவல்கள் கிளம்பாவிட்டாலும், இன்றைய விசாரணைக்குப் பின்பு இந்த 5 போலீசார்களும் கைது செய்யப்படலாம் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.