Advertisment

சாட்டை துரைமுருகன் கைது

Sattai Duraimurugan arrested

Advertisment

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது தமிழக அரசு மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை வீராணம் பகுதியில்ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை முருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

police TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe