Skip to main content

தாளவாடி காட்டில் "புலி முருகனா?" -இறந்து கிடந்த ஆண் புலியால் பரபரப்பு...!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

முன்பெல்லாம் சத்தியமங்கலம் காட்டில் நடந்து செல்வதென்றால் காட்டு யானைகளை கண்டுதான் பயம் ஆனால் இப்போது சிறுத்தைகளும், புலிகளும் பெருகிவிட்டன. ஆதிவாசிகள், மலை மக்கள் கூட புலி நடமாட்டத்தால் முந்தைய காலத்தைப்போல் சர்வ சாதாரணமாக காட்டுக்குள் செல்ல முடியாத அச்சத்தில் தான் உள்ளார்கள்.

 

sathyamangalam forest tiger


யானைகள், காட்டெருமைகள், கரடிகள், செந்நாய்களை காட்டுக்குள் கண்டால் அதன் போக்கிலேயே விரட்டி விட்டு தப்பித்து வருவார்கள். தற்போது சில வருடங்களாக சிறுத்தை மற்றும் புலிகளையும் காட்டை நன்கு பழகிய ஆதிவாசிகளால் விரட்ட முடிகிறது என நம்பிக்கையோடு கூறுகிறார்கள் மலை வாசிகள் சிலர். மேலும் சிலர் எதிர்தாக்குதலில் புலி ஈடுபட்டால் புலி முருகன் திரைப்படத்தில் வருவது போல புலியை கொன்று வெற்றி பெற்று உயிர் தப்பவும் முடியும் என்கிறார்கள்.

இந்தநிலையில் தான் மர்மமான முறையில் ஒரு ஆண் புலி இறந்து கிடந்துள்ளது. சத்தியமங்கலம் மலையில் ஆசனூர் வனக் கோட்டத்தில் உள்ள தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட கோடம்பள்ளி தொட்டி என்ற வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் சிவகுமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் நேற்று காலை ரோந்து சென்றனர்.  அப்போது வனப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. வனவிலங்கு ஏதாவது இறந்து கிடக்கிறதா என வனத்துறையினர் தேடிப் பார்த்தபோது கவிபசப்பா பள்ளத்தில் ஒரு ஆண் புலி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

sathyamangalam forest tiger

 

இது குறித்து  மாவட்ட வன அலுவலர் நாயுடுவிற்கு தகவல் கொடுத்தனர். பிறகு உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஈரோடு வன பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் ஆண் புலியின் உடலை அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார். இறந்த புலியின் பல் மற்றும் கால் நகம், தோல் என எல்லாமும் இருந்துள்ளது. எனவே இது வேட்டையில் கொல்லப் படவில்லை என உறுதி செய்தனர். 

உடல் நலக்குறைவு காரணமாக புலி இறந்ததா? அல்லது காட்டுக்குள் நடமாடிய ஆதிவாசியை புலி தாக்க முயன்றதால் ஏற்பட்ட மோதலில் புலி கொல்லப்பட்டதா...? அப்படியென்றால் புலியை கொன்ற புலி முருகன் இங்கு யார் அவர், எங்கு இருப்பார் என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள். இறந்த புலியின் உடல் அதே வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது.
 

பிறகு பாதுகாப்பாக தோட்டாக்களை வெடித்துக் கொண்டு துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் அந்த அடர்ந்த காட்டை விட்டு வெளியேறும் போது புதர் மறைவில் சில புலிகள் இருந்ததும் கோபத்துடன் உர்... உர்.. ரென கத்தியிருக்கிறது.

 


          



 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Next Story

பெண் யானைக்கு உடல்நலக் குறைவு; பரிதவிக்கும் குட்டி!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Female elephant ill health Poor kid

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டுள்ளது பார்ப்போர் மனதையும் கலங்க செய்கிறது.