சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட போலீசாரிடம்12 மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணைக்காகபிடிக்க முயன்றபோது, சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர், தலைமை காவலர் தப்பிச் செல்ல முயன்றனர். விசாரணையின்போது தப்ப முயன்ற தலைமை காவலர் முருகனை சிபிசிஐடி போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர். பாலகிருஷ்ணனும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்பி செய்ய முயன்றார் என சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. பாலகிருஷ்ணனும்,முருகனும் தப்பிக்க முயற்சித்த தகவல் அனைத்தும் ஆவணங்களில் சேர்க்கப்படும்எனசிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.