Skip to main content

கடல் அலையில் சிக்கி ஆந்திரா மாணவன் பலி.

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

பூம்புகார் கடலில் குளிக்கச் சென்ற ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கடலோரப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாகை மாவட்ட சுற்றுலா தலங்களில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது பூம்புகார். அங்கு சிலப்பதிகார கலைக் கூடதோடு, கடற்கரையும் இருப்பதால் வெளி மாநில மாவட்ட மாணவர்களும், பொதுமக்களும் சுற்றுலாவாக வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் விடுமுறையை கொண்டாட கும்பகோணம் அருகே உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி,டெக் முதலாம் ஆண்டு படித்து வரும் ஆந்திராவை சேர்ந்த சந்தீப் குமார் ரெட்டி, தனது சக நண்பர்களோடு கடலில் குளிக்க சென்று இருக்கிறார்.

sastra university college Andhra student  visit Poompuhar high sea level student death

 

அங்கு மகிழ்ச்சியாக குளித்துக்கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கடலில் அலை அதிகரித்ததால், பெரிய அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டிருக்கிறான். கடலில் சிக்கிய மாணவனை கண்ட சக நண்பர்கள் செய்வதறியாமல் சத்தம் போட்டுள்ளனர். அதை கண்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அலையில் சிக்கிய மாணவனை மீட்டு 108 வாகனத்தின் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

 

sastra university college Andhra student  visit Poompuhar high sea level student death

 

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பூம்புகார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாணவனின் இறப்பு பூம்புகார் கடற்கரையோரப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.