ADVERTISEMENT

வரும் 27ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதி! - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்

07:52 PM Jan 19, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறைத் தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை விரைவில் நிறைவு செய்ய உள்ளார். மேலும் ஜனவரி மாதம் அவர் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் வரும் 27ம் தேதி அவர் விடுதலை ஆவது உறுதி ஆகியுள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தங்களுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT