தற்போது மீண்டும் சசிகலா திருச்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளரான அருள்ஜோதி தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அருள்ஜோதி சசிகலாவிடம் பேசுகையில், "கடந்த 25 ஆண்டு காலமாக துணைச் செயலாளராகவே கட்சியில் பதவி வகித்து வருகிறேன். திருச்சியின் 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம் ஜாதி அரசியலே. ஜெயலலிதா திருச்சி தொகுதியில் தலித் எழில்மலையை வெற்றி பெறச் செய்தார். இந்த ஜாதி அரசியலை ஒழிக்க நீங்கள் நிச்சயம் திரும்பி வர வேண்டும்" என்றார்.
இந்த ஆடியோ தற்போது வெளியாகி திருச்சி அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.