Skip to main content

கிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...

Published on 28/02/2021 | Edited on 28/02/2021

 

Sasikala Politics...  Edappadi in confusion ... OPS in silence ...

 

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில் தேர்தல் தேதி முன்னராகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் மும்மரமாக அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. அதேபோல் தேர்தல் நடைமுறைகளுக்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார் சசிகலாவை சந்தித்த பிறகு ஐ.ஜே.கே உடன் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார். சசிகலாவை சரத்குமார் சந்தித்த பிறகு இது நடந்துள்ளதால் அவசர அவசரமாக எடப்பாடி தீவிர பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாமகவிற்கு 23 இடங்கள்  ஒதுக்கப்பட்டு, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

Sasikala Politics...  Edappadi in confusion ... OPS in silence ...

 

இதேபோல பாஜகவிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பாஜக தங்களுக்கு 60 தொகுதிகள் வேண்டும் எனக் கூறியதோடு, தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவிடம் நீங்கள் பேச வேண்டும் என பாஜக மாநில தலைமை அதிமுக தலைமையிடம் கூறியதால் அதிமுகவும் அமித்ஷாவுடன் பேச தயாராகி வருகிறது. இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜெயித்த அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமல்லாமல் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக எம்எல்ஏ வேட்பாளர்களும் மீண்டும் வாய்ப்பு கேட்கிறார்கள். ஆகையால் பாஜகவிற்கு  பாமகவிற்கு கொடுக்கப்பட்ட 23 தொகுதிகளை விட குறைவாகவே கொடுக்க வேண்டும் அதிகமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தீர்கள் என்றால் அதிமுக நிற்கக்கூடிய தொகுதிகள் குறையும். அதேபோல் அதிமுகவிற்கு அதிகமாக செல்வாக்கு உள்ள தொகுதிகளையும் பாஜகவிற்கு ஒதுக்கக் கூடாது. இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். ஆகையால் பாஜகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்க கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

Sasikala Politics...  Edappadi in confusion ... OPS in silence ...

 

இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஒருசிலர், அதிமுக வெற்றி அடையக்கூடிய செல்வாக்குமிக்க தொகுதிகளை பாஜகவிற்கு கொடுத்தாலோ அல்லது நல்ல வெற்றிவாய்ப்புள்ள அதிமுக நபர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலோ சசிகலா பக்கம் சென்று விடுவோம் என்று ஓபனாகவே எடப்பாடியிடம் சொல்லியுள்ளனர். இதனால் எடப்பாடி குழப்பத்தில் இருக்கிறார். இவ்வளவு நாட்கள்  பணிவாக பேசினார்கள் ஆனால் இப்பொழுது மாறி பேசுகிறார்களே என்ற குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இதுகுறித்து அவர் விசாரிக்கையில், நேற்று இருந்த நிலவரம் வேறு. நேற்று முதல்வர் என்ற பதவியில் இருந்தீர்கள். அப்ப இருந்த நிலவரம் வேற ஆனால் இன்று தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. இப்பொழுது உள்ள நிலவரம் வேற. அவரவர்கள் தங்களுடைய பதவியை தக்கவைக்க தான் பார்ப்பார்கள். அதனால் தான் அப்படி பேசுகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நம்மை எதிர்க்கவும் தயாராக இருப்பார்கள். அவர்களது கோரிக்கையில் நியாயம் இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறியுள்ளனர் என தெரிவிக்கின்றனர் அதிமுகவினர்.

 

அதேபோல் சசிகலாவும், தனக்கு வேண்டிய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடம் அங்கேயே இருந்து சீட்டு பெறுவதற்கான வாய்ப்பினை பாருங்கள். அவர்கள் சீட்டுக் கொடுக்கவில்லை என்றால் அதற்கடுத்த நடவடிக்கைகளை பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறியிருக்கிறாராம்.

 

இதை எல்லாவற்றையும் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மௌனமாகவே இருக்கிறார் என அதிமுக மேல்மட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.