sasikala, ilavarasi health condition bangalore hospital statement

Advertisment

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று (24/01/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது. அவருக்கு கரோனா பாதிப்பு குறைந்துள்ளது; உறுதுணையோடு எழுந்து நடக்கிறார். சசிகலா உணவு உட்கொள்கிறார்; ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மருத்துவ சிகிச்சைக்கு சசிகலா நன்றாக ஒத்துழைக்கிறார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.

அதேபோல், கரோனா பாதிப்பால் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சசிகலாவின் உறவினரான இளவரசியின் உடல்நிலையும் சீராக உள்ளது. இளவரசிக்கு கரோனாவுக்கானச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.