சசிகலாவுக்கு உடல் நலக்குறைவு - மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்!

SASIKALA HOSPITAL STATE HUMAN RIGHTS COMMISSION LAWYER

சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அவரது புகார் மனுவில், 'சசிகலா விடுதலையாக வெகுசில நாட்களே உள்ள சூழலில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெருத்தச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சசிகலாவிற்குசிறையில் ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு குறித்து விசாரிக்க வேண்டும். சசிகலாவை கேரளா (அல்லது) புதுச்சேரி மாநிலத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (20.01.2021) ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலா, சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டாவது நாளாக தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

hospital sasikala state human rights commission
இதையும் படியுங்கள்
Subscribe