SASIKALA HEALTH CONDITION HOSPITAL STATEMENT

Advertisment

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஏழாவது நாளாக தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. சசிகலா ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 98%ல் இருந்து 97 ஆக குறைந்துள்ளது. அறிகுறிகள் இல்லாத நிலையில் அவருக்கு தொடர்ந்து கரோனா தொற்றுக்கானச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு 178 ஆக உள்ளதால் சசிகலாவை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். சசிகலா சீராக உணவு உட்கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.