sasikala health condition bangalore hospital statement

Advertisment

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது; அவர் தாமாகவே உணவு உட்கொள்கிறார் என்றுமருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று (25/01/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா உடல்நிலை சீராக உள்ளது; அவர் தாமாகவே உணவு உட்கொள்கிறார். அவருக்கு கரோனா தொற்று குறைந்துள்ளது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு 205 ஆக அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசிக்கும் திறன் சீராக உள்ளது. சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும், மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சசிகலா எழுந்து உட்கார்ந்ததாகவும், உதவியுடன் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வரும் சசிகலாவை மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.