சசிகலா வருகை - ஜெ., நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! (படங்கள்)

சசிகலா சென்னை திரும்ப உள்ள நிலையில் ஜெ., நினைவிடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை தற்போது நிறைவு செய்து விடுதலையாகி உள்ளார். கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் குணமானதையடுத்து இன்று காலை சென்னை திரும்ப பெங்களூருவிலிருந்து கிளம்பினார். இதையடுத்து அவரது காரில் மீண்டும் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது. கொடியைப் பயன்படுத்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சசிகலா தரப்பு அதனைப் புறக்கணித்து மீண்டும் அதிமுக கொடியைப் பயன்படுத்தி சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இரவு அவர் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜெ., நினைவிடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் போலவே அதிமுக தலைமை அலுவலகத்திலும் அதிக அளவிலான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

sasikala
இதையும் படியுங்கள்
Subscribe