m.n. house vijayasanthi.jpg

வி.கே.சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 19-ந் தேதி காலமானார். கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சசிகலா பெங்களூரு ஜெயிலில் இருந்து 15 நாள் பரோலில் தஞ்சை வந்தார். ம.நடராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் சசிகலா தஞ்சை அருளானந்த நகரில் தங்கியிருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் திரைப்பட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி சசிகலாவுக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று மாலை தஞ்சை வந்தார். அருளானந்த நகருக்கு வந்த விஜயசாந்தி, சசிகலாவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். சுமார் 2 மணி நேரம் அங்கு இருந்த அவர் பின்பு புறப்பட்டு சென்றார்.

Advertisment