தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில்அதிமுகவினர் சர்கார் திரைப்படத்தை எதிர்த்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிமுகவினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுகவினர் பேனர்களை கிழிக்கும் முன்பாகவே, அதை அகற்றத் தொடங்கினர் விஜய் ரசிகர்கள். சர்கார் திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.