Skip to main content

‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு நாளை  விசாரணைக்கு வருகிறது...

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
sarkar

 


நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படத்தை இயக்குநர் முருகதாஸ் இடக்கியுள்ளார். இந்த திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
 

இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலாவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை  கேட்காமல்,  படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும் சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்,படத்தின் டைட்டிலில் தன்னுடைய பெயரை சேர்க்க வேண்டும், 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வருண் என்ற ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார்.  


அதில் செங்கோல் என்ற தலைப்பில்  இந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ள  நிலையில், தன்னுடைய கதையை திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார்.
 

இதுகுறித்து  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளதாகவும் ,அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்ததில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். 
 

எனவே, சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் அறிவிக்கவேண்டும்’ என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.சுந்தர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.புருஷோத்தமன் முறையிட்டார். அதற்கு நீதிபதி, ‘ஏற்கனவே எதிர்தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கை நாளை விசாரிக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்