Advertisment

சரவணபவன் ராஜகோபால் காலமானார்!

சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது காலமானார்.

Advertisment

ஜீவஜோதி கணவர் பிரான்சிஸ் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில், ராஜகோபாலுக்கு வழங்கப்பட்டஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார் ராஜகோபால்.

saravanabhavan Rajagopal passes away

அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்ராஜகோபாலின்உடல்நிலை மோசமடைததால் அவர் அரசு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.ஆனால் அங்கே மருத்துவ வசதிகள் சரியாக இல்லை எனவே தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற அனுமதிக்கோரிஅவரது மகன் சரவணன்மனுதாக்கல் செய்திருந்தார்.

Advertisment

saravanabhavan Rajagopal passes away

தற்போதைய நிலையில் அவரைஇடமாற்றுவது சிக்கலானது எனஸ்டான்லி மருத்துவமனைஅறிக்கை விடுத்த நிலையில் அதற்கு தான் முழு பொறுப்பேற்பதாக ராஜகோபால் மகன் தரப்பு கூறராஜகோபால்தனியார் மருத்துவமனையில்சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதியளித்தது. அதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு வடபழனியில் உள்ளஒருதனியார் மருத்துவமனையில்சிகிச்சை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளது.

death rajagopal saravana bhavan
இதையும் படியுங்கள்
Subscribe