Skip to main content

சொந்த கிராமத்தில் சரவணபவன் ராஜகோபால் உடல் அடக்கம்(படங்கள்)

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

 

சரவணபவன் ராஜகோபால் உடல் சொந்த கிராமமான புன்னையடிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.  மாலை 5 மணிக்கு  பூர்வீக தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

 

a1

 

சரவணபவன் ஹோட்டல் என்று சொல்லும் போதே ஒரு பிரம்மாண்டம் இருக்கும். உணவின் தரத்திற்கு 2 இட்லிக்கு 4 வகை சட்னி என்று பிரம்மாண்டம் காட்டி சரவண பவன் எனும் மெகா பிராண்ட்டை உருவாக்கியவர் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டம் புன்னையடி என்ற கிராமத்தில் 1947ம் ஆண்டு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால். இவரது தந்தை ஒரு வெங்காய விவசாயி. வீட்டில் பெரியளவில் வசதி கிடையாது.

 

a2

 

இதனால், சிறு வயதிலிலேயே அதிக கஷ்டங்களை அனுபவித்த ராஜகோபால், 1973ம் ஆண்டு சென்னைக்கு வந்து, கே.கே. நகரில் மளிகைக் கடை ஒன்றை திறந்தார். ‘அண்ணாச்சி கடை’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட, தொடர்ந்து நல்ல முறையில் கடையை நடத்தி வந்தார். அதில், அவர் எதிர்பார்த்த அளவுக்கு லாபமும் கிடைத்தது. 

 

a4

 

இந்நிலையில் கே.கே.நகரில் உள்ளவர்கள் தி.நகருக்கு சென்று ஹோட்டலில் சாப்பிடும் நிலை இருந்ததால் அவர்களது நலன் கருதி 1981ம் ஆண்டு கே.கே.நகரிலேயே ஒரு சிறிய ஹோட்டலை திறந்தார். அது தான் அவர் திறந்த முதல் ஹோட்டலாகும். முருகன் மீது அதீத பக்தி கொண்டதால் தனது ஹோட்டலுக்கு சரவணபவன் என பெயரிட்டார்.

 

a5

 

இவரது ஹோட்டலின் சாம்பார், மற்ற இடங்களை விட சுவையாக இருந்ததால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மக்களாகவே இவரது கடைக்கு மார்க்கெட்டிங் செய்தனர். வாய் மொழியாகவே சரவணபவன் ஹோட்டலின் பெயர் பரவலாக சென்னை மாகாணம் முழுவதும் பரவியது.

 

a

 

மக்களின் ஆதரவு, எதிர்பார்த்ததை விட கிடைத்த வருமானம் என்ற இரண்டு தூண்களுடன் தனது வியாபாரத்தை விரிவுப்படுத்த தொடங்கினார் ராஜகோபால். அவ்வாறு தொடங்கிய முயற்சி இன்று இந்தியாவில் மொத்தம் 33 கிளைகள், வெளிநாடுகளிலும் ஹோட்டல்கள் என 45 கிளைகளை தாண்டி அவரது இரண்டு இட்லிக்கு 4 வகை சட்னி போல் தாராளமாகவும் பிரம்மாண்டமாகவும் பரந்து விரிந்துள்ளது. சென்னையில் தியாகராய நகர், அசோக் நகர், ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம், வடபழனி (இரு கிளைகள்), அண்ணாநகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தி திரையரங்க கட்டிடம், பீட்டர்ஸ் சாலை, பாண்டி பஜார், சென்ட்ரல் தொடருந்து நிலையம், எழும்பூர், கடற்கரை ரயில் நிலையம், மயிலாப்பூர், அசோக் பில்லர், ஸ்பென்சர் பிளாசா, அசெண்டாஸ் தரமணி, வெங்கட நாராயணா சாலை, அண்ணா சாலை, ஆம்பிட் அம்பத்தூர் என்று சென்னையில் மட்டும் இத்தனை கிளைகள் திறந்தார்.

 

ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்து இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை ஒருவர் உருவாக்கி இருக்கிறார் என்றால், அதற்கு  எவ்வளவு பெரிய தொழில் நேர்த்தி, உழைப்பு, கடமையுணர்வு, அர்ப்பணிப்பு இருந்திருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையால் ராஜகோபால் வீழ்ந்தாலும், அவர் உருவாக்கிய சரவண பவன் என்னும் தரம்  (பிராண்ட்) என்றும் நிலைத்திருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரது உடல் சொந்த கிராமமான புன்னையடிக்கு இன்று காலை 7:30  மணிக்கு வந்தது. இன்று மாலை 5 மணிக்கு  பூர்வீக தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் இன்று பதவியேற்பு!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர். ராஜகோபால் இன்று (21/11/2019) காலை பதவியேற்றுக் கொள்கிறார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில், ஆர். ராஜகோபாலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இன்று பதவியேற்கும் ஆர். ராஜகோபால் தமிழக தலைமை ஆணையராக மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.

tamilnadu right to information commissioner r rajagopal swearing in ceremony


தமிழக தலைமை ஆணையராக இருந்த ஷீலாபிரியா வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றதை அடுத்து, ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால், தலைமை தகவல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமனம்!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.


தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தற்போது தமிழக தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய ராஜகோபால் தற்போது இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு முன்னதாக தமிழக தலைமை ஆணையராக இருந்த ஷீலாபிரியா வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பதவி காலியானது. அதன் தொடர்ச்சியாக தலைமை தகவல் ஆணையராக யாரை தேர்வு செய்யலாம் என்று முதலமைச்சர் தலைமையில் தேர்வு குழு ஒன்று தேடுதல் குழுவை அமைத்தது.

 

R. Rajagopal

 

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சிங்காரவேலு தலைமையில் அந்த தேடுதல் குழுவானது அமைக்கப்பட்டது. அதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.வெங்கடேசன் ஆகிய குழுவானது அமைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. தலைமை தகவல் ஆணையர் பதவிக்கான தகுதிகள் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. அதன்படி பொது மக்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிந்தவர்கள், சட்டத்தில் முன் அனுபவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிர்வாகம், மேற்பார்வையில் ஆளுமை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் விண்ணப்பிக்க கூடிய நபர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது, அரசியல் கட்சியைச் சாராதவராகவும் ஆதாயம் தரும் பதவிகளில் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் பல்வேறு தரப்பினர் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த தேடுதல் குழுவானது வந்திருந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழுவிடம் சமர்ப்பித்தது. இன்றைய தினம் காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தேடுதல் குழு கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் இறுதி செய்யப்படுவதற்கான கூட்டம் அரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் குழுவில் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் மூன்று பெயர்களுடன் கூடிய அந்த இறுதிப் பட்டியலை ஆளுநரிடம் நேரில் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் ஐஏஎஸ் தற்போது மாநில தகவல் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் தற்பொழுது ஆளுநரின் புதிய செயலாளராக ஆனந்தராம் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்