சென்னையில் உள்ள ஹோட்டல் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் மற்றும் ஹாட் பிரெட் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீரென்று சோதனை நடத்திவருகின்றனர். உணவகங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் அலுவலகங்கள் என தமிழ்நாடு முழுக்க மொத்தம் 32 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த நான்கு வருடமாக இந்த நிறுவனங்கள் தங்களின் வருவாயை குறைத்து காட்டியுள்ளதால் இந்த வருமானவரித்துறை சோதனை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் முழுமையான காரணம் தெரியவில்லை. இதில் அஷோக் நகர் மற்றும் கே.கே நகரில் உள்ளசரவணபவன் உரிமையாளர் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடத்திவருகிறது.
சரவணபவன் உட்பட பிரபல ஹோட்டல்களில் வருமான வரித்துறை சோதனை
Advertisment