Sarathkumar has said that if I become cm I will tell you the secret of living up to 150 years

“2026 தேர்தலில் என்னை முதல்வராக்கினால்உங்களுக்குஒரு ரகசியம் சொல்லுவேன்” என சமத்துவ மக்கள்கட்சித்தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

மதுரைபழங்காநத்தத்தில்நேற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த நிலையில் கூட்டத்தில் பேசிய சரத்குமார், “நாம் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதையும், உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்பதையும் தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர். அது நடக்குமா என்பது அடுத்த சட்டமன்ற தேர்தலில் தெரிய வரும். இந்தகாலகட்டத்தில்பல்வேறு போதைகள்அதிகமாகிக்கொண்டே வருகிறது. 2025 ஆம் ஆண்டில் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருக்கும். அதனால் மனிதவளத்தைக்கெடுக்கும் நோக்கில் வெளிநாடுகள் செய்யும் சதிதான் இது.

நான் 70வயதைத்தொடவுள்ளேன்.ஆனால்இன்றும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். நான் இன்னும் 150 வயது வரை உயிரோடு இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். அந்த ரகசியத்தை சொல்ல வேண்டுமென்றால்,வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் என்னைமுதல்வர் அரியணையில் ஏற்றினால் சொல்வேன்” என்றார்.