ADVERTISEMENT
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தின் துவக்க நாளான இன்று சாம்மல் புதனாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சென்னையில் உள்ள சாந்தோம் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடுகள் நடத்தது. வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்களின் நெற்றியில் அருட்தந்தையர்கள் “மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கு திரும்புவாய்” என்ற வாசகத்தைச் சொல்லி கருப்பு நிற சாம்பலை பூசினார்கள். அதனை, சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரும் வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments