Advertisment

’  மகளின் உடல் உறுப்புகள் கடத்தப்பட்டிருக்கலாம்’: சிபிசிஐடி விசாரணை கோரும் நடிகையின் தாயாா்

சமீபத்தில் தமிழகம் முமுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் சென்னையில் திரைப்படதயாாிப்பாளரான பாலகிருஷ்ணன் தனது மனைவி துணைநடிகைசந்தியாவை கை, கால், தலை, இடுப்பு என தனித்தனியாக துண்டாக்கி கொலைச்செய்யப்பட்டது தான். இதில் சென்னை பெருங்குடி பள்ளிகரணை குப்பை கிடங்கில் இருந்து அந்த பெண்ணின் வலது கை மற்றும் இரண்டு கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மற்ற உடல் பாகங்களை கைது செய்யப்பட்ட கணவா் பாலகிருஷ்ணன் அடையாளம் காட்டிய இடங்களில் தேடியும் அதை கண்டு பிடிக்க முடியவில்லை.

Advertisment

p

7 பாகங்களாக வெட்டி கொலைச் செய்யப்பட்டதில் 3 பாகங்கள் மட்டும் தான் கிடைத்திருக்கிறது. இதனால் மீதி 4 பாகங்களை கண்டு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அவா்கள் தேடி வருகின்றனா். கடந்த ஜனவாி 21-ம் தேதி அந்த 3 பாகங்கள் கண்டுப்பிடிக்கபட்டு தற்போது ஒரு மாதம் ஆகிறது. இதனால் கொலைச்செய்யப்பட்ட சந்தியாவின் பெற்றோா்களும் உறவினா்களும் சோகத்தில் இருக்கின்றனா்.

Advertisment

இந்த நிலையில் சந்தியாவின் சொந்த ஊரான குமாி மாவட்டம் அருமநல்லூா் அருகே ஞாலத்தில் சந்தியாவின் தாயாா் பிரசன்ன குமாாியை சந்தித்து பேசினோம். அப்போது அவா் கண்ணீா் மல்க, எனது மகளை அவளுடைய கணவா் பாலகிருஷ்ணாமட்டும் கொலை செய்திருக்கு முடியாது. இதில் ஓரு கும்பல் ஈடு பட்டிருக்கிறது. அதே போல் பாலகிருஷ்ணனின் பெற்றோா் மற்றும் சகோதாிகளிடமும் விசாாிக்க வேண்டும்.

சந்தியாவுடைய முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், மூளை, கல்லீரல் கொண்ட உடல் பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதையெல்லாம் பாலகிருஷ்ணனால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றுகிறது. இதனால் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

balakrishnan Kumari santhiya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe