ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்தார் சந்தானம்

sn

நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான தனது விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்தார் அதிகாரி சந்தானம்.

பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவியரை தவறாக வழிநடத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி மீது குற்றச்சாட்டு எழுந்த பரபரப்பினை அடுத்து அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைத்திருந்தார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு பல்கலைக்கழக அதிகாரிகள், சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.

விசாரணை அறிக்கையினை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சந்தானம் தாக்கல் செய்தார்.

governor report Santhanam submitted
இதையும் படியுங்கள்
Subscribe