Skip to main content

அதிகாரிகளின் மெத்தனத்தால் டெங்குவில் முதன்மையான சங்கராபுரம்... கட்டுப்படுத்துமா அரசு..?

Published on 14/11/2021 | Edited on 14/11/2021

 

Sankarapuram is the main cause of dengue due to the complacency of the authorities ... will the government control it ..?

 

மழைக்கால டெங்குவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு போராடிக் கொண்டு வரும் வேளையில், அதிகாரிகளின் மெத்தனத்தால் டெங்கு பாதிப்பால் மாவட்டத்திலேயே முதன்மையான பஞ்சயாத்து என பெயர் வாங்கியுள்ளது சங்கராபுரம் ஊராட்சி.

 

கரோனா பெருந்தொற்று குறைந்துக் கொண்டிருக்கும் வேளையில், அதற்குப் போட்டியாக பாதிப்புக்களை உருவாக்கி வருகின்றது டெங்கு வைரஸ். பொதுவாக மழைக்காலம் துவங்கி விட்டாலே டெங்கு, சிக்கன்குனியா ஆகிய வைரஸ்கள் மக்களை பெருமளவில் அவதிக்குள்ளாக்கும். சில நேரம் உயிரிழப்பு அபாயமும் ஏற்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2012, 2013, 2015, 2017ம் ஆண்டுகளில் சிக்கன்குனியா மற்றும் டெங்குவின் பாதிப்பு மிக அதிகம். பின்னாளில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், மழைக்காலங்களில் அவ்வப்போது மக்களை கடும் சிரமத்திற்குள்ளாக்கும். இம்முறை அவ்வாறு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாக்கடைகள் கண்டறியப்பட்டன. இவைகளில் இலை, குப்பைகள் தேங்கி, அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்வதில் இடையூறு ஏற்படாத வண்ணம் அவற்றை அகற்றும் பணியினை செவ்வனே செய்ததது அரசு நிர்வாகம். இத்தகைய நடவடிக்கைகளால் மற்ற மாநிலங்களில் டெங்குவின் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் தமிழ்நாட்டில் சற்று குறைவு தான் என்கின்றது புள்ளிவிபரம்.

 

இதற்கு மாறாக, சிவகங்கை மாவட்டத்தில் அரசிற்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் நோக்கில் சில அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் மாவட்டத்தில் டெங்கு வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் குறிப்பாக 15 வார்டுகள் கொண்ட சங்கராபுரம் பஞ்சாயத்தில் டெங்குவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எட்டு. 44 தூய்மைப்பணியாளர்கள் மற்றும் 35 தூய்மைக்காவலர்கள் கொண்ட இந்த பஞ்சாயத்து தான் மாவட்டத்திலேயே அதிகமான பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்ட பகுதி என்கின்றது சுகாதாரத்துறை குறிப்பு ஒன்று. பாதிக்கப்பட்டோர்களில் 5 வயது குழந்தை தொடங்கி 36 வயது வரை உள்ள டெங்கு நோயாளிகள் உயிர்காக்க தஞ்சமடைப்பதிருப்பது தனியார் மருத்துவமனைகளை மட்டுமே. இதில் ஒருவர் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். " சில அரசியல்வாதிகளின் தலையீட்டால் சங்கராபுரம் பஞ்சாயத்து நிர்வாகம் சீரழிந்திருக்க, இதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரிகள் தன் இஷ்டப்படி மெத்தனமாக நடக்க டெங்குவின் வீரியம் இந்த பஞ்சாயத்தில் அதிகமாகியுள்ளது. இதனை சரி செய்து மக்களின் உயிரை காக்க வேண்டியது அரசின் கடமை" என்கின்றனர் சங்காரபுரம் பகுதி மக்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.