Skip to main content

சங்கரன்கோவிலை தென்காசியுடன் இணைக்காதே... கிளம்பும் தீப்பொறி கண்டனங்கள்!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி என்ற புதிய மாவட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்தது. தென்காசியுடன் சங்கரன்கோவில் தொகுதியும் இணைக்கப்படுவதை அறிந்த சங்கரன்கோவில் மற்றும் தென்காசியின் ஒரு பகுதியான வி.கே.புதூர் நகர மக்களும் கடுமையாக எதிர்த்தனர். அடிமட்ட வாழ்க்கையின் பொருட்டு தங்கள் பகுதிகள் நெல்லையுடனே நிலைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் சங்கரன்கோவில் தொகுதி வானம் பார்த்த பூமி மற்றும் தென்காசிக்கு நெல்லையைவிட மிகவும் தொலைவில் உள்ளது. தவிர வளமான தென்காசி மாவட்டத்துடன் இணைந்தால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய விவசாய வறட்சி நிவாரணங்கள் மற்றும் பஞ்ச நிவாரணங்கள் கிடைக்காமலே போய்விடும் என்று சங்கரன்கோவில் தொகுதியின் விவசாய சங்கத் தலைவரான சந்தானம் தலைமையிலான விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

sankarankovil merge tenkasi district tn govt decision peoples against strike

அத்துடன் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான வைகோவும் சங்கரன்கோவில் நெல்லையுடன் நீடிக்க வேண்டும், தென்காசியுடன் இணைக்கப்பட்டால் சங்கரன்கோவில் தொகுதியின் கீழ்புறப் பகுதியான சங்கரன்கோவில் குருவிகுளம் ஒன்றியம் மற்றும் திருவேங்கடம் தாலுகா இதர யூனியன் பகுதியிலுள்ள மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட ஜீவாதார வாழ்வாதாரங்கள் பாதிப்பதோடு, அம்மக்களுக்குத் தென்காசி மிகவும் தொலைவான பகுதி என்பதால் அடிதட்டு மக்கள் தங்களின் உரிமைகளை பெறுவதற்கு தென்காசி சென்று வருவதில் மிகவும் சிரமம் என்று மக்களின் குமுறல்களையும், கொந்தளிப்பையும் அரசுக்கு நேரடியாகவே கோரிக்கை மனுக்கள் மூலம் தெரிவித்தார்.

sankarankovil merge tenkasi district tn govt decision peoples against strike


இதனிடையே இணைப்பு தொடர்பாக மக்களின் கருத்தை அறிய வந்த வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கமிட்டியிடம் சங்கரன்கோவில் பகுதி மக்கள், தென்காசியுடன் இணைக்கப்பட்டால் தங்களின் நடைமுறை வாழ்க்கைகள் துன்பங்கள் துயரங்களை விரிவாக அவரிடம் பதிவு செய்தனர். அத்துடன் தங்கள் பகுதி நெல்லையுடன் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

sankarankovil merge tenkasi district tn govt decision peoples against strike



அதே நேரம் சங்கரன்கோவில் மாவட்ட கோரிக்கை இயக்கத்தினர், தென்காசி தலைமையிடமானால் மேற்கு மூலையிலிருக்கும் தென்காசிக்கு கீழ் முனைப்பகுதிகள் மற்றும் கிராமப் புற மக்கள் அங்கு சென்று வருவதில் மிகவும் சிரமப்படுவர். போக்குவரத்து வசதியற்ற நிலையில் பொழுது போய்விடும். எனவே சங்கரன்கோவிலைத் தலைமையிடமாய் வைத்தால் அனைத்து தொகுதி மக்களும் மத்தியிலிருக்கும் இங்கே வந்து செல்வதில் கால நேரமும் குறையும். மேலும் 1996லேயே சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அப்போதைய அரசிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டது என்றும் கடையடைப்பு மற்றும் பேரணி நடத்தி அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

sankarankovil merge tenkasi district tn govt decision peoples against strike

ஆனால் அனைத்து அதிகாரிகளும் மக்களின் சிரமங்களையும் எதிர்ப்புகளையும் அரசுக்கு முறையாகத் தெரிவித்தனர். மக்களின் இந்த சிரமங்கள் அனைத்தையும் பரிசீலிக்காதத் தமிழக அரசு சங்கரன்கோவிலை இணைத்து தென்காசி மாவட்டம் வரும் 22ம் தேதி உதயமாகும் என்று அறிவித்தது. இதனால் ஆத்திரமான சங்கரன்கோவில் தொகுதி மக்கள் கொதிப்படைந்தனர். அரசு மக்களின் கோரிக்கையைப் புறந்தள்ளியதோடு தென்காசியோடு இணைத்ததை தங்களின் வருத்தத்தையும் கம் கண்டனத்தையும் தெரிந்தது கண்டனப் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
 

இதுதான் ஆரம்பம். எங்களின் இந்தப்போராட்டம் இனிமேல் தான் மிகவும் வலுப்பெறும் என்று அதன் நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. விவகாரமாய் கிளம்பியுள்ள இந்த நெருப்புப் புள்ளி விரிவடையலாம் என்பதே யதார்த்தமாகத் தெரிகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.