Skip to main content

சங்கரன்கோவிலை தென்காசியுடன் இணைக்காதே... கிளம்பும் தீப்பொறி கண்டனங்கள்!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி என்ற புதிய மாவட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்தது. தென்காசியுடன் சங்கரன்கோவில் தொகுதியும் இணைக்கப்படுவதை அறிந்த சங்கரன்கோவில் மற்றும் தென்காசியின் ஒரு பகுதியான வி.கே.புதூர் நகர மக்களும் கடுமையாக எதிர்த்தனர். அடிமட்ட வாழ்க்கையின் பொருட்டு தங்கள் பகுதிகள் நெல்லையுடனே நிலைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் சங்கரன்கோவில் தொகுதி வானம் பார்த்த பூமி மற்றும் தென்காசிக்கு நெல்லையைவிட மிகவும் தொலைவில் உள்ளது. தவிர வளமான தென்காசி மாவட்டத்துடன் இணைந்தால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய விவசாய வறட்சி நிவாரணங்கள் மற்றும் பஞ்ச நிவாரணங்கள் கிடைக்காமலே போய்விடும் என்று சங்கரன்கோவில் தொகுதியின் விவசாய சங்கத் தலைவரான சந்தானம் தலைமையிலான விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

sankarankovil merge tenkasi district tn govt decision peoples against strike

அத்துடன் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான வைகோவும் சங்கரன்கோவில் நெல்லையுடன் நீடிக்க வேண்டும், தென்காசியுடன் இணைக்கப்பட்டால் சங்கரன்கோவில் தொகுதியின் கீழ்புறப் பகுதியான சங்கரன்கோவில் குருவிகுளம் ஒன்றியம் மற்றும் திருவேங்கடம் தாலுகா இதர யூனியன் பகுதியிலுள்ள மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட ஜீவாதார வாழ்வாதாரங்கள் பாதிப்பதோடு, அம்மக்களுக்குத் தென்காசி மிகவும் தொலைவான பகுதி என்பதால் அடிதட்டு மக்கள் தங்களின் உரிமைகளை பெறுவதற்கு தென்காசி சென்று வருவதில் மிகவும் சிரமம் என்று மக்களின் குமுறல்களையும், கொந்தளிப்பையும் அரசுக்கு நேரடியாகவே கோரிக்கை மனுக்கள் மூலம் தெரிவித்தார்.

sankarankovil merge tenkasi district tn govt decision peoples against strike


இதனிடையே இணைப்பு தொடர்பாக மக்களின் கருத்தை அறிய வந்த வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கமிட்டியிடம் சங்கரன்கோவில் பகுதி மக்கள், தென்காசியுடன் இணைக்கப்பட்டால் தங்களின் நடைமுறை வாழ்க்கைகள் துன்பங்கள் துயரங்களை விரிவாக அவரிடம் பதிவு செய்தனர். அத்துடன் தங்கள் பகுதி நெல்லையுடன் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

sankarankovil merge tenkasi district tn govt decision peoples against strike



அதே நேரம் சங்கரன்கோவில் மாவட்ட கோரிக்கை இயக்கத்தினர், தென்காசி தலைமையிடமானால் மேற்கு மூலையிலிருக்கும் தென்காசிக்கு கீழ் முனைப்பகுதிகள் மற்றும் கிராமப் புற மக்கள் அங்கு சென்று வருவதில் மிகவும் சிரமப்படுவர். போக்குவரத்து வசதியற்ற நிலையில் பொழுது போய்விடும். எனவே சங்கரன்கோவிலைத் தலைமையிடமாய் வைத்தால் அனைத்து தொகுதி மக்களும் மத்தியிலிருக்கும் இங்கே வந்து செல்வதில் கால நேரமும் குறையும். மேலும் 1996லேயே சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அப்போதைய அரசிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டது என்றும் கடையடைப்பு மற்றும் பேரணி நடத்தி அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

sankarankovil merge tenkasi district tn govt decision peoples against strike

ஆனால் அனைத்து அதிகாரிகளும் மக்களின் சிரமங்களையும் எதிர்ப்புகளையும் அரசுக்கு முறையாகத் தெரிவித்தனர். மக்களின் இந்த சிரமங்கள் அனைத்தையும் பரிசீலிக்காதத் தமிழக அரசு சங்கரன்கோவிலை இணைத்து தென்காசி மாவட்டம் வரும் 22ம் தேதி உதயமாகும் என்று அறிவித்தது. இதனால் ஆத்திரமான சங்கரன்கோவில் தொகுதி மக்கள் கொதிப்படைந்தனர். அரசு மக்களின் கோரிக்கையைப் புறந்தள்ளியதோடு தென்காசியோடு இணைத்ததை தங்களின் வருத்தத்தையும் கம் கண்டனத்தையும் தெரிந்தது கண்டனப் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
 

இதுதான் ஆரம்பம். எங்களின் இந்தப்போராட்டம் இனிமேல் தான் மிகவும் வலுப்பெறும் என்று அதன் நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. விவகாரமாய் கிளம்பியுள்ள இந்த நெருப்புப் புள்ளி விரிவடையலாம் என்பதே யதார்த்தமாகத் தெரிகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.