Skip to main content

தனி மாவட்டம் அமைக்கக்கோரி போராட்டம், பேரணி, கடையடைப்பு ஸ்தம்பித்தது சங்கரன்கோவில்.

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் தேவை, மற்றும் இன்னல்கள் தீர சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று சங்ரன்கோவில் மாவட்டம் கோரிக்கை இயக்க ஒருங்கிணைப்புக் குழுவினர் அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தும், 17ம் தேதியன்று தொகுதி முழுவதிலும், கடையடைப்பு, தொழில் நிறுத்தம் செய்து அரசின் கவனத்தைத் திருப்பும் வகையில் பந்த் அறிவித்தனர்.

Sankarankovil individual district need peoples rally  Shop closures

அன்றைய தினம் பெட்டிக்கடை முதல் பெரிய கடை வரை அடைக்கப்பட்டதுடன், டீ சாப்பிடுவதற்குக் கூட முடியாத அளவுக்கு அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இது மட்டுமல்ல, சுமார் ஐந்தாயிரம், விசைத்தறிகளைக் கொண்ட தொகுதியின் அனைத்து தொழில் நிறுவனங்களும் நிறுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. நகரம் மட்டுமல்லாது திருவேங்கடம் தாலுகா முதல் குக்கிராமங்கள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சங்கரன்கோவில் தொகுதியே ஸ்தம்பிக்கும் நிலைமைக்கு சென்றது.

Sankarankovil individual district need peoples rally  Shop closures

ஒருங்கிணைப்புக்குழு சார்பில், பொது மற்றும் நிர்வாகக் குழு தலைவர் முத்தையா, செயலாளர் உள்ளிட்டோர்களும் நகர வர்த்தக அமைப்பு, விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், தரப்புகளின் முக்கியஸ்தர்கள், தி.மு.கவின் முன்னாள் எம்.பி. தங்கவேலு மற்றும் நகரின் பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்களுடன் ஆயிரக்கணக்கில் திரண்டவர்கள் பேரணியாக வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். விவசாயம், ஆன்மீகம், வர்ததகம், தொழில் உற்பத்தி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் உள்ளிடக்கிய சங்கரன்கோவில், மாவட்டத் தலைநகரமாவதற்கான சாத்தியக் கூறுகள் அடங்கிய கோரிக்கை மனுவை வட்டாட்சியரிடம் கொடுத்தனர்.

இந்த விவகாரம் ஒரு புறம் வளர்ந்து கொண்டு போனாலும், மறுபக்கமோ, எம்.பி.யான வைகோ, மற்றும் பொது நல ஆர்வலர்களும், சங்கரன்கோவில், நெல்லையுடனேயே நீடிக்க வேண்டும். தென்காசியுடன் இணைப்பு கூடாது என்ற ஒத்த கருத்தினையும் முன் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்தது போராட்டமல்ல. ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்!

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

DMK women panchayat leader threatened

 

முன்னாள் காவல்துறை அதிகாரியும் அவரது மனைவியும் சேர்ந்துகொண்டு திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரி. இவர் களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவராகவும், திமுகவில் மாவட்ட மகளிரணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். சிவசங்கரி தன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யக்கூடியவர் என்றும், எப்போதும் பொதுமக்களை அணுகி தங்களுடைய குறைகளை கேட்டறிந்து சரி செய்யக்கூடியவர் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

இந்நிலையில், பஞ்சாயத்து துணைத்தலைவராக இருப்பவர் மரகதம். அவரது கணவரான முருகன் என்பவர் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர். இவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் சில அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தன் கணவர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால் அவரோடு சேர்ந்து அதிகாரிகளை மிரட்டி வரும் மரகதம் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள கோப்புகளை சரிபார்த்து வந்துள்ளனர்.

 

அதுமட்டுமின்றி, அங்குள்ள சில முக்கியமான கோப்புகளையும் எடுத்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில், பஞ்சாயத்து தலைவரான சிவசங்கரி துணைத்தலைவர் மரகதம் மற்றும் அவரது கணவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அதற்கெல்லாம் மசியாத இவர்கள், சிவசங்கரியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி மரகதம் - முருகன் தம்பதி மீது சங்கரன்கோவில் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள சிசிவிடி காட்சிகளை ஆய்வு செய்ததில் மரகதமும் முருகனும் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த முருகனும் தலைமறைவாகியுள்ளார்.

 

இதையடுத்து, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை வலைவீசி தேடி வருகின்றனர். அதே சமயம், திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

வன்முறை மூண்ட இடம் செல்ஃபி பாயிண்ட்டாக மாறியது! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

sri lanka incident selfie point peoples

 

இலங்கையில் வன்முறையைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கிற்கு இடையில் கொழும்பு காலிமுகத்திடலில்  மக்களின் அமைதி போராட்டம் தொடர்கிறது. இதேவேளையில், பிரதமர் அலுவலகத்தைப் போராட்டக்காரர்கள் சிலர் சூறையாடினர். 

 

நாட்டை நெருக்கடியில் தள்ளிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்துடன் கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி முதல் கொழும்பு காலிமுகத்திடலில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலால் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் அங்கு வன்முறை வெடித்தது. 

 

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கார்கள் கொளுத்தப்பட்டன. ராஜபக்சே பூர்வீக இல்லம் கொளுத்தப்பட்டது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வந்த பேருந்துகள் தீக்கு இரையாக்கப்பட்டன. இந்த இடம் தற்போது செல்ஃபி பாயிண்ட்டாக மாறியுள்ளது. 

 

மஹிந்த ராஜபக்சே பதவி விலக காரணமான, இந்த சம்பவத்தை தங்கள் செல்போன்களில் புகைப்படமாகப் பதிவு செய்துக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில், இங்கு பலரையும் செல்போன் கையுமாகப் பார்க்க முடிகிறது. 

 

காலை 07.00 மணி முதல் பகல் 02.00 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வந்தனர். பெட்ரோல், டீசலை வாங்கவும், உணவுப் பொருட்களை வாங்கவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆயினும், கொழும்பு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவம் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. 

 

இதற்கிடையே, காலிமுகத்திடலில் அமைதி வழிபோராட்டம் நடத்துவோரைக் கலைக்க நீதிமன்றம் மூலம் காவல்துறை முயற்சிப்பதைக் கண்டித்து புதுக்கடை நீதிமன்றம் முன்பாக பொதுமக்கள் மவுனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.