Skip to main content

சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்கள்...தென்காசி மாவட்டத்தில் இணைக்கக் கூடாது...வருவாய்துறை அமைச்சருக்கு வைகோ கோரிக்கை.

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம் என்று புதிய மாவட்ட அறிவிப்பு அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது. அதில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியும் இணைக்கப்படலாம் என்ற தகவல் வெளியானதையடுத்து, வறட்சியான சங்கரன்கோவில் தொகுதியை வளமான தென்காசிப் பகுதிகளோடு இணைத்தல் கூடாது. நெல்லையிலேயே நீடிக்க வேண்டும் என்று சங்கரன்கோவில் தொகுதியில் உட்பட்ட அனைத்துப் பிரிவினரும் கோரிக்கை வைத்தனர். வருவாய்துறை ஆணையர் சத்ய கோபாலின் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் கடும் எதிர்ப்பை சங்கரன்கோவில் பகுதி மக்கள் பதிவு செய்ததை ஏற்கனவே நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வருவாய்துறை அமைச்சருக்கு வலுவான கோரிக்கை மனுவை அனுப்பியிருக்கிறார். அதில் தென்காசியை ஒட்டியுள்ள வளமான பகுதியைக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவித்ததை வரவேற்கிறேன்.

Sankarankoil, Thiruvenkadam Talukas should not be JOIN in the Tenkasi district



ஆனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களில் அடங்கியுள்ள குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஒன்றியப் பகுதிகள், சங்கரன்கோவில் நகராட்சி உள்ளிட்ட பகுதிகள், நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வகையில் மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும். இந்தப் பகுதி மக்கள் அனைவரும், நெல்லைக்கு வந்து செல்லும் தூரம் குறைவு என்பதோடு, 24 மணிநேரமும் பல வழித்தடங்களில் போக்குவரத்து வசதியிருக்கிறது. மாறாக தென்காசியிலிருந்து இப்பகுதிகளுக்கு முழுமையான போக்குவரத்து வசதி கிடையாது. இரவு 9 மணிக்கு மேல் தென்காசியில் இருந்து சங்கரன்கோவில் நகருக்கு கூட பஸ் வசதி கிடையாது. 

Sankarankoil, Thiruvenkadam Talukas should not be JOIN in the Tenkasi district



மக்கள் இரண்டு மூன்று பஸ்களில் ஏறி இறங்கி செல்வதால் பயண நேரம் 3 மணி நேரம் வரை அதிகரித்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர். கல்வி, மருத்துவ மற்றும் அரசுப் பணி போன்ற சேவைகள், மற்றும் வேலை வாய்ப்புகள் சங்கரன்கோவில் தொகுதி மக்களுக்கு நெல்லையே உகந்ததாக உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் விருப்பத்திற்கேற்ப சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வகையில் மாவட்டப் பிரிவினை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே அவர் தலைமையில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் செப் 03- ம் தேதி அன்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.