Sankaraiah's funeral procession began

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும்விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா(102)உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துஅப்பல்லோ மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் சங்கரய்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

மறைந்த சங்கரய்யாவின் உடல் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து குரோம்பேட்டையில் உள்ள இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நேற்று பிற்பகல் சென்னை தி.நகர் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருடைய இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. அடையாறில் இருந்து பெசன்ட் நகர் வரை உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. தொடர்ந்து தமிழக அரசின் அறிவிப்பின்படி அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

Advertisment