Skip to main content

தூய்மைப் பணியாளர்களுக்கு 'பிரியாணி' விருந்து வைத்து அசத்திய சமூக ஆர்வலர்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

sanitary workers briyani food social activist


அண்ணாமலைநகர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் கரோனா தடுப்புப் பணிகளைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு சால்வை அணிவித்து முகக் கவசம், கபசுர குடிநீர் வழங்கி அனைவரையும் அமர வைத்து பிரியாணி விருந்து வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலைநகர் சிறப்பு பேரூராட்சி உள்ளது. இங்கு தூய்மைப் பணியாளர்கள் 35 பேர் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டவர்கள் பேரூராட்சி பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் கரோனா ஊரடங்கு நேரத்தில் பேரூராட்சி பகுதிகளில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் உள்ளிட்டவைகளைத் தெளித்து அப்பகுதியில் வாழும் மக்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
 

sanitary workers briyani food social activist


இவர்களின் சேவையைக் கௌரவிக்கும் வகையில் உள்ளதால் சி.கொத்தங்குடி ஊராட்சி முத்தையாநகரில் வசிக்கும் சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி சம்மந்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சியில் பணியாற்றும் அனைவருக்கும் முகக் கவசம், கபசுர குடிநீர் பவுடர் மற்றும் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்தார்.


இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் அண்ணாமலைநகர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் முகக் கவசம், கபசுரகுடிநீர் பவுடர் வழங்கி சால்வை அனிவித்து கௌரவித்து அனைத்து ஊழியர்களையும் அமரவைத்து சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி குடும்பத்துடன் பிரியாணி உணவைப் பரிமாரினார். இது அனைத்து ஊழியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட்ரமணன் உள்ளிட்ட பேரூராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.