மணல் திருடியவரை மணலே பலி வாங்கியது!!

வேலூர் வழியாக செல்லும் பாலாற்றில் தண்ணீர் ஓடுவதை விட மணல் லாரி ஒடுவது தான் அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் மணல் அள்ளக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படியிருந்தும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் லாரிகள் பாலாற்றில் மணல் அள்ளி விற்பனை செய்கின்றன. இதனை அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்வதில்லை. இந்நிலையில் காலம்காலமாக பாலாற்றில் மணல் அள்ளியவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்களுடன் மோதி மணல் அள்ளி விற்பனை செய்ய முடியாததால் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலங்களில் மணல் அள்ளி விற்பனை செய்கின்றனர்.

sand

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கானம்பாளையம் சுடுகாடு பாம்பாற்று புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 30 அடி, 40 ஆடி ஆழம் தோண்டி மண்ணோடு கலந்த மணலை எடுத்து பில்டர் செய்து அந்த மணலை மாட்டு வண்டியில் ஏற்றிச்சென்று விற்பனை செய்கின்றனர். இன்று நவம்பர் 15 ந்தேதி மாலை பொறம்போக்கு நிலத்தில் சிலர் திருட்டு தனமாக மணல் அள்ளினர். அப்போது மணல் அள்ளி கொட்டிக்கொண்டுயிருந்த அதே பகுதியை சேர்ந்த 55 வயதுடைய கூத்தன் என்கின்ற ராஜேந்திரன் மீது மணல் சரிந்தது.

இதனைப்பார்த்து மற்றவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முயல, முடியவில்லை. இதனால் சம்பவ இடத்திலேயே கூத்தன் பலியானார். இச்சம்பவம் குறித்து அறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவயிடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணல் திருடியவர்களில் ஒருவரை மணலே பலி வாங்கியுள்ளது.

sand
இதையும் படியுங்கள்
Subscribe