Skip to main content

கொள்ளிடம் ஆற்றில் இரவில் மணல் திருட்டு லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!!

Published on 18/10/2020 | Edited on 18/10/2020
sand

 

சிதம்பரம் அருகே பெராம்பட்டு கொள்ளிடம் ஆற்றில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல்  5 லாரிகள் மற்றும் பொக்லின் வாகன உதவிவுடன் மணல் திருட்டு நடைபெறுவதாக ஜெயங்கொண்டம்பட்டினம், திட்டுகாட்டூர், பெராம்பட்டு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கொள்ளிடம் ஆற்றுக்கு இரவு நேரத்தில் வந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுக்குள் 5 லாரிகள் மற்றும் பொக்லின் வாகனம் மண் அள்ளுவதற்கு தயார் நிலையில் இருந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் லாரி மற்றும் பொக்லின் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் மணலை லாரி லாரியாக ஏற்றிச் செல்கிறார்கள் அப்பகுதியல் உள்ளவர்கள் கேட்டால் தகுந்த அனுமதியுடன் தான் வெளியே செல்கிறது என்று கூறுகிறார்கள். மேலும் இந்த பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் ஆடு, மாடு கொட்டகையில் கொட்டுவதற்கும் வீட்டின் சாக்கடையில் ஈரத்தை போக்க எங்க ஊரில் உள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து சாக்கில் மண் எடுத்தால் அவர்களை பிடித்து ஆயிரம், இரண்டாயிரம் வசூலிக்கும் இந்த  காவல்துறையினர் லாரி லாரியாக இரவு நேரத்தில் மணல் அள்ளி செல்கிறார்கள் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் இந்த லாரிகளை சிறை பிடித்துள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்த அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் .இது அண்ணாமலை நகர் காவல் நிலையம் அருகே பள்ளமாக உள்ள இடத்தில் கொட்டுவதற்கு எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எடுக்காமல் லாரிகளை திருப்பி அனுப்பி விட்டோம். இந்தப் பகுதியில் பல பேர் மணல் திருட்டில் ஈடுபடுகிறார். அவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.