Skip to main content

கடத்தல் மணல் லாரியை பிடித்து வந்த எஸ்.ஐ... போகச் சொன்ன இன்ஸ்பெக்டர்...!

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

தமிழ்நாட்டில் மணல் கொள்ளையர்கள் அதிகரித்த பிறகு ஆற்று மணல் திருடப்பட்டு ஆறுகள் காணாமல் போய் வருகிறது. இதனால் குடிக்க தண்ணீரை ரூ. 10 பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதைப் பார்த்தாவது மணல் கொள்ளையர்கள் திருந்துவார்களா என்றால் திருந்துவதற்கு வழியில்லை. இந்த மணல் கொள்ளைக்கு அதிகாரிகளே துணை போவது தான் வேதனை.

 

Sand theft issue

 

 


புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி பகுதியில் உள்ள அக்னி ஆற்றில் இருந்து மணல் திருடப்பட்டு தஞ்சை மாவட்டங்களில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு வரை கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமார் மணல் கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கொள்ளை ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் அக்னி ஆற்றில் குரும்பிவயல் கிராமத்தில் மணல் திருடி தஞ்சை மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை அறிந்து வடகாடு  போலீசாரும், வருவாய் துறையினரும் வழித்தடத்தை உடைத்து எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தான் ஒரத்தநாடு பகுதிக்கு தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் இருந்து தொடர்ந்து மணல் கடத்தி வரப்படுவதை அறிந்து ஒரத்தநாடு காவல் உதவி ஆய்வாளர் விஜய்கிருஷ்ணன் இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மணல் லாரியை பிடித்து காவலர் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு தூங்கச் சென்றுவிட்டார். அவர் லாரியை பிடித்த தகவல் பல இடங்களுக்கும் பரவியதும் பலரிடம் இருந்தும் போன். அதனால் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தூங்கிவிட்டார்.

 



ஆனாலும் அந்த லாரியை எடுத்துச் செல்ல முயன்ற பலரும் அதிகாலை நேரத்திலும் தஞ்சை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள ஒரு ஆய்வாளருக்கு தொடர்பு கொண்டு சொல்ல, அந்த ஆய்வாளர் உடனே காவல் நிலையத்தில் இருந்த ஒரு காவலரின் செல்போனில் தொடர்பு கொண்டு தூங்கிக் கொண்டிருந்த உதவி ஆய்வாளரிடம் கொடுக்கச் சொல்லி அந்த கடத்தல் மணல் லாரியை விட செய்துள்ளார்.

ஆனால் விடியும் போது போலீசார் பிடித்து வந்து நிறுத்திய கடத்தல் மணல் லாரியை காணவில்லை என்று பொதுமக்கள் பேசிக் கொண்டனர். நடந்த உண்மையை அறிந்த மக்கள் நித்திரை இழந்து புடிச்சு வந்த கடத்தல் மணல் லாரியை சாதாரணமாக விடச் சொன்ன ஆய்வாளர் மேல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

ஆனால் காவல் துறையில் இருக்கும் பலருக்கு, தஞ்சை மாவட்டத்தில் மணல் கடத்தல் நடப்பது மாவட்டத்தில் உள்ள அத்தனை காவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரியும். அவர்களின் உதவியில் தான் எல்லாம் நடக்குது. அப்படித் தான் 2 மாதம் முன்னால் கறம்பக்குடி லாரி பிடிபட்டதும் காவல் உயர் அதிகாரியே காவல் நிலையத்திற்கு போன் செஞ்சு லாரி ஓனரை விடச் சொன்னார். இப்படித் தான் நடக்கிறது என்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.