Skip to main content

மணல் கடத்தி சென்ற 26 லாரிகள் பறிமுதல்

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
26 lorries seized


உரிய ஆவணமின்றி சென்னைக்கு மணல் ஏற்றிச் சென்ற 26 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 


நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளிலிருந்து சவுட்டு மணல் என்று அனுமதி வாங்கி ஆற்று மணலை ஏராளமான லாரிகளில் அடிக்க்கடி கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மணல் கடத்தலை தடுக்க எஸ்.பி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களுக்கு கடுமையான   உத்தவிட்டுள்ளார். அதையடுத்து மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் அவரவர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது நாகப்பட்டினம் மாவட்டம், வேடங்குடி பகுதியிலிருந்து  சென்னைக்கு ஏராளமான லாரிகள் மூலம் ஆற்று மணல் ஏற்றி  செல்லப்படுவதாக காவல்துறையினர்க்கு ரகசிய  தகவல் வந்தது.
 

அதையடுத்து குறிஞ்சிப்பாடி - பாலூர் சாலை, குறிஞ்சிப்பாடி - ஆடூர் அகரம் சாலை ஆகிய சாலைகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது வரிசையாக சில லாரிகள் வந்து கொண்டிருந்தன. காவல்துறையினர் அவற்றை  நிறுத்தி  சோதனை செய்தனர்.  சோதனையில் மணல் லாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி ஆற்று மணல் எடுத்து  வந்தது தெரியவந்தது. அதனால் காவல்துறையினர் 26 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். 
 

அத்துடன் லாரிகளின ஓட்டுனர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள கரையனூரை சேர்ந்த குமார்(எ)ரத்தினகுமார், ஈஸ்வரி கிராமத்தை சேர்ந்த  ஏழுமலை(38),  படலாம் பழைய காலணியை சேர்ந்த ரவி(36),    திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பெருமாள்(38), ஆத்தூரை சேர்ந்த ஜெயபால்(36),  ஜெயக்குமார்(36),  செங்கல்பட்டு அருகிலுள்ள அ.பள்ளிமேட்டை  சேர்ந்த கன்னியப்பன்(39), சிங்கப்பெருமாள் கோயிலை சேர்ந்த செந்தில்குமார்(39),  திண்டிவனம் சாலை மடத்தை சேர்ந்த சக்திவேல்(32),  விலங்கம்பாடியை சேர்ந்த  கோபால்(38), செங்கல்பட்டு அருகேயுள்ள அஜ்மீர் தர்காவை சேர்ந்த சுரேஷ்(28), செஞ்சி வட்டம், காட்டுசித்தாமூரை சேர்ந்த  பிரகாஷ்(30) ஆகிய 12 லாரி ஓட்டுநர்களையும் கைது செய்தனர்.
 

மேலும் சோதனையின்போது லாரியை விட்டுவிட்டு, தப்பியோடிய காஞ்சிபுரம் மாவட்டம் பூதூரை சேர்ந்த ஜெகதீசன், வில்லியம்பாக்கத்தை சேர்ந்த பன்னீர், விக்கிரவாண்டியை சேர்ந்த பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளாஊரை சேர்ந்த வேலு,  கூடுவாஞ்சேரியை சேர்ந்த மாணிக்கம்,   திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த மணி, முள்ளிக்கொளத்தூரை சேர்ந்த விநாயகமூர்த்தி,  ஊரப்பாக்கத்தை சேர்ந்த சேகர், செங்கல்பட்டு வட்டம் அஞ்சூர் கொல்லை  சரவணன்,  மலையம்பாக்கம் திருநாவுக்கரசு, பிலாந்தூர் நம்பிராஜன்,  அஜ்மீர் தர்காவை சேர்ந்த சோமு, மதுராந்தகம் ஜவகர், சேலத்தை சேர்ந்த மாயவேல்,  அஞ்ஜூர் புதிய காலணியை சேர்ந்த வீரராகவன், மலையம்பாக்கம்  பூபதி,  நித்தியானந்தம் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கம்'-துரைமுருகன் அதிரடி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
'Removal of Jaber Sadiq from DMK'-Duraimurugan takes action

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்கை நிரந்தமாக நீக்கி திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும் எனவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்தான் அந்த நபர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.