Skip to main content

விழுப்புரத்தில் மணல் கொள்ளை உச்சத்தை அடைந்துள்ளது: ராமதாஸ்

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
Sand robbery



திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள புதிய மாங்கனி அரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். 
 

அப்போது அவர், 
 

காவிரி கொள்ளிடம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணல் கொள்ளை சிறிது தடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கரூர் போன்ற மாவட்டங்களில் மணல் கொள்ளை முழுவீச்சில் நடக்கிறது. விழுப்புரத்தில் மணல் கொள்ளை உச்சத்தை அடைந்துள்ளது.


சங்கராபரணி தென்பெண்ணை மணிமுக்தா ஆறுகளில் மற்றும் ஏரிகளில் அதிகளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது. மணல் கொள்ளைக்கு துணை போவதாக விழுப்புரத்தில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட காவலர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


ஆனால் வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தமிழக அரசு தலையிட்டு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மேலும் மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மத்திய மாநில அரசுகள் துணை போக கூடாது. அந்த ஆலைக்கு ஆதரவாக விவசாயம் அமைப்பு என்ற என்ற பெயரிலும் தொழிலாளர் நல பிரிவு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

அதன் மூலம் அந்த ஆலையை திறக்க கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த ஆலயம் புற்றுநோயால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது மக்களின் உயிருக்கு வேட்டு வைக்கும் இந்த ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது.

ஆசிய நாடுகளை புரட்டிப்போட்ட பெரும்புயல் தமிழகத்தையும் தாக்கும் அபாயம் உள்ளது. இதனை சமாளிக்க அரசானது தயாராக வேண்டும். புயலின் தாக்கம் 240 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருந்தது. அதேபோல் புயல் ஏற்பட்டால் தமிழகத்திலும் அந்த அளவுக்கு புயலின் வேகம் இருக்கும்.

பணக்கார நாடுகள் என்பதால் அமெரிக்கா போன்ற நாடுகளை சமாளித்தது. ஆனால் தமிழகத்தில் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை சமாளிக்க முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். அதிக மழை புயல் வறட்சி என பன்மடங்கு அதிகமாகும் என உலக அறிவியலாளர்கள் கருத்தாக உள்ளது.

எனவே வங்கக்கடலில் புயல் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் அரசுக்கு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். மக்கள் தொலை நோக்கு பார்வை உள்ள அரசை பெற்றுள்ளதா என சந்தேகபடும் படியாக உள்ளது என பேசினார்.


.

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.