Skip to main content

ராமர் கோவில் கட்ட சைக்கிளில் மணல்..!!!

Published on 19/01/2020 | Edited on 19/01/2020

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராமேஸ்வரம் கோவிலில் பூஜை செய்த மணலை தரை மார்க்கமாக சைக்கிளில் எடுத்து சென்றனர் இந்து அமைப்பினர்.

 ராம ஜென்மபூமியான அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எவ்வித தடையுமில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதனை தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கான பூர்வாங்க வேலையினை செய்து வருகின்றனர் குறிப்பிட்ட சில இந்து அமைப்பினர். 

 

 Sand on bicycle to build Rama Temple

 

இதற்காக ஒவ்வொரு தரப்பினரும் தங்க செங்கற்களையும் அனுப்பிய வண்ணமுள்ளனர். இதனின் தொடர்ச்சியாக ஆங்காங்கே தங்களால் முடிந்த உபயங்களை ஏனோர் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த இந்து முன்னணியினர் தங்களுடைய மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் மூன்று பேர் அக்னி தீர்த்தக் கடற்கரை மணலில் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை  செய்தனர். 

அதன்பின் அந்த மணலை எடுத்துக்கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளொன்றுக்கு  40 முதல் 50 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், ஓசூர் வழியாக பெங்களூர், தெலுங்கானா, ஹைதராபாத் வழியாக சென்று எழுபதாவது நாளில் அயோத்தியை அடைந்து ராமேஸ்வரத்தில் பூஜை செய்த மணலை கோவில் கட்டுவதற்காக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர் அவர்கள். பக்தர்களும் தங்கள் பங்கிற்கு கடற்கரை மணலை எடுத்து அயோத்திக்கு புறப்பட்ட  இந்து முன்னணி அமைப்பினர் இடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ராமர் கோவில் கட்ட அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது'-கே.எஸ்.அழகிரி கேள்வி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
nn

ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது என முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ரொம்ப கொச்சையான கேள்விதான். கோயில் கட்டினால் ஆட்சிக்கு வந்திட முடியுமா? ஒரு கோவிலை கட்டி விட்டால் ஆட்சிக்கு வந்து விட முடியும் என எந்த முட்டாள் நினைப்பான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எனக்குத் தெரிந்து எங்கள் கிராமங்களில் கும்பாபிஷேகம் செய்தவர்கள் எல்லாம் அடுத்த பஞ்சாயத்து போர்டு எலக்சனில் தோற்று இருக்கிறார்கள். காரணம் மக்கள் அதற்காக வாக்களிப்பது இல்லை.

அது வேறு இது வேறு. இன்றைக்கு அயோத்தியில் நடைபெற்று இருக்கின்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்திய அரசாங்கத்தினுடைய பணமோ, உபி அரசாங்கத்தினுடைய பணத்தையோ நீங்கள் தண்ணியாக செலவிடுகிறீர்களே. அது எப்படி நியாயமாகும். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எப்படி அதைச் செய்ய முடியும்? எந்த நியாயம் எந்த சட்டம் அதை அனுமதிக்கிறது. நீங்கள் ரயிலை எல்லாம் இலவசமாக அனுப்புகிறீர்கள். எப்படி அது சாத்தியம். யார் அதற்கு பணம் கட்டியது? இன்றைக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது. அதற்கு கணக்கு காட்ட முடியுமா? ராமருக்கான புகழைக் கெடுத்து விடாதீர்கள் இதைத்தான் நான் பாஜகவிற்கு, ஆர்எஸ்எஸ்க்கும் சொல்லிக் கொள்வது. அவர் அப்பழுக்கற்றவராக இருந்தார். ஆனால் அவருடைய பெயரை பாழ்படுத்துகிறீர்கள் நீங்கள். அது தவறு என்பதை நாம் பரப்புரையாக கொண்டு செல்ல வேண்டும். அச்சப்படக்கூடாது'' என்றார்.

Next Story

‘அக்பரும் சீதாவும் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது’ - விஷ்வ இந்து பரிஷத்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 Vishwa Hindu Parishad petitioned Akbar and Sita lionsshould not be in the same place

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்த பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே, இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். அதனால், அந்த சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் வருகிற 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.