Skip to main content

“என்னமோ நடக்குது மர்மமா இருக்குது” 35 நாட்கள்... பூட்டிய அறையில் இந்தியாவின் தலையெழுத்து

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

தேர்தல் கமிஷன் தொடர்ச்சியாக எதிர்கட்சியினரை குறிவைத்து சோதனையிட்டுவந்தது. இந்நிலையில் தேர்தல் முடிந்தவுடன்  தமிழகத்தின் அனைத்து தரப்பினரின் “எப்படி இவர்களை நம்பி 35 நாட்கள் நாம் ஓட்டளித்த ஓட்டு பெட்டி பத்திரமாக இருக்கும் அதில் ஏதாவது கோல்மால் செய்துவிடுவார்களோ” என்ற பேச்சு அடங்குவதற்குள் வாக்களித்து இரண்டாவது நாளிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் மதியம் 3 மணிக்கு கலால்வரி தாசில்தாரான சம்பூர்ணம் என்ற பெண் அதிகாரி தலைமையில் 4 பேர் உள் சென்று மாலை 5.30 மணிக்கு சில ஆவணங்களுடன் வெளியேவந்தனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. 

 

sampooranam

 


இந்த தகவலை அடுத்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மருத்துவ கல்லூரியில் கூடி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது இன்றைகான சிசிடிவி காட்சிகள் வேண்டும் என திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் கேட்கப்பட, அதிராகரிகள் தரப்பு சிசிடிவி கேமரா செயல்படவில்லை என  கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது வெளியில் உள்ள எதிர்க்கட்சி தரப்பினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு திரண்ட கட்சிக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு நேரம் ஆக ஆக திமுக கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் அங்கு குவிய தொடங்கினர். அனைத்து கட்சி வேட்பாளர்களும் அங்கிருந்தனர் அதிமுக வேட்பாளரை தவிர இது அங்கிருந்தவர்களுக்கு சந்தேகத்தை அதிகபடுத்தியது.


சிறிது நேரத்தில் காரில் வந்து இறங்கிய நான்கு இளைஞர்கள் போலீஸாரிடம் ஏதோ சொல்ல, அவர்களை மட்டும் உள்ளேவிட முற்பட அங்கிருந்தவர்கள் அவர்களை இழுத்து யார் என்று விசாரித்தனர். அப்போது அவர்கள், தாங்கள் சி.சி.டி.வி இன்ஜினியர்கள் அமைச்சர் வீட்டிலிருந்து வருகிறோம் என்று ஒருவரும். இன்னொருவர் மெடிக்கல் காலேஜ் மாணவர்கள் என்றும் முன்னுக்கு பின் முறனாக பதில் கூறியுள்ளனர். அதனால், அங்கிருந்தவர்கள் அவர்களை அடையாள அட்டையை காண்பிக்கும்படி  கேட்டுள்ளனர். இதனால், அங்கு கைகலப்பாகி அவர்களுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. அதற்குள் காவல்துறை தலையிட்டு அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டுவந்தனர்.

 

sampooranam

 

உள்ளே சென்ற வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், “மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் உள்ளது. இங்கு மதியம் பெண் அதிகாரி ஒருவர் மாவட்ட ஆட்சியரின் எந்தவித அதிகாரப்பூர்வமான அனுமதியும் இல்லாமல் அவராக உள்ளே வந்து மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்ளே உள்ள ஆவணங்களை எடுத்து வெளியே உள்ள ஜெராக்ஸ் கடையில்  ஜெராக்ஸ் எடுத்துள்ளார். அவர் மூன்று மணி நேரம் உள்ளே இருந்துள்ளார். இந்த தகவல் அங்கிருக்கும் காவலர் ஒருவர் எனக்கு தகவல் தெரிவிக்கவே உடனே நான் ஆட்சியரிடம் தகவலை தெரிவித்தேன். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து இவர் அதிகாரிதான் என்று சொல்லி விட்டு  அவரை அழைத்து சென்றுவிட்டனர். ஆனால் எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாமல் இவர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இங்கே இருந்திருக்கிறார். எப்படி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள இடத்தில் ஆட்சியரின் அதிகாரபூர்வமான அனுமதி இல்லாமல் உள்ளே வந்தார். உள்ளே வந்து அவர் என்ன செய்தார் என்று எங்களுக்கு தெரியவேண்டும். எங்களுக்கு சிசிடிவி காட்சி வேண்டும். எப்போது வந்தார் எப்போது சென்றார் என தெரிய வேண்டும். ஆவணங்களை ஏன் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆவணங்களை ஏன் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வந்து நேரில் பதில் சொல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு அவர் கட்டாயம் அந்த அதிகாரியிடம் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்தார். எல்லாம் பயந்தது போலவே நடந்துவிட்டது இன்னும் 32 நாட்கள் எப்படி தள்ளபோகிறோம் என்று பயமாக இருக்கிறது” என கூறினார்.

 

sampooranam

 

டேவிட்அண்ணாதுரையோ முதலில் சி.சி.டி.வி காட்சிகள் அழிந்துவிட்டது என்றார். பிரச்சனை பெரிசாக காட்சிகளை போட்டு காண்பித்தார். அந்த பெண் உள்ளே சென்று ஆவணங்கள் உள்ள அறையில் செல்வது, பின்பு மூன்றுமணிநேரம் கழித்து வெளியே வருவது. வரும்போது கையில் கட்டு கட்டாக ஆவணங்களுடன் வெளியே வரும் காட்சிகள் தெரிகின்றது. என் கேள்வி இதுதான் யார் சொல்லி அவர் உள்ளேவந்தார். எப்படி அவரை உள்ளேவிட்டார்கள். அதுமட்டுமின்றி அவர் வரும்போது யாருமே அவரை வழிமறிக்கவில்லை என்பது எங்களுக்கு சந்தேகத்தை அதிகரிக்கசெய்கிறது. இது சாதாரண விஷயம் இல்லை. ‘என்னமோ நடக்குது மர்மமா இருக்குது’ மோடி வித்தையை காண்பிக்க ஆரம்பித்துள்ளார் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.



ஆட்சியர் நம்மிடம் தெரிவிக்கையில், “உதவி தேர்தல் அதிகாரி சம்பூர்ணம் ஓட்டு பெட்டி உள்ள அறைக்கு செல்லவில்லை. சீல் வைக்கபடாத ஆவணங்கள் உள்ள அறைக்குதான் சென்றுள்ளார்” என்று நம்மிடம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு விளக்கமளித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ “சம்பூர்ணா என்ற பெண் அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளோம். மேற்படி அவர் ஏன் அங்கு போனார், யார் சொல்லி எதற்காக பாதுகாக்கபட்ட இடத்திற்கு போனார். என்று தீவிரமாக விசாரித்து கொண்டு இருக்கிறோம்” என்றார்.

 

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் “வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கின்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. காலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும், அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள், நுழையவிட்டு பாதுகாப்பு கொடுத்தவர்கள் அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் கழக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் இரவு பகல் பார்க்காமல் விழிப்புணர்வுடன் இருந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கைப்பற்ற நினைக்கும் அராஜக அதிமுக ஆட்சியிடமிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். எல்லோரும் பயந்த மாதிரியே நடக்குது. ஓட்டு மிஷினில் கைவைத்துவிடுவார்களோ என்று எதிர்க்கட்சியினரும் மக்களும் பேசுவது கேட்க தொடங்கியிருக்கிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.