Skip to main content

'வேண்டாம் விட்டுடுனு சொன்னேன் கேட்கல...!' மனைவியின் ஆண் நண்பரை போட்டுத்தள்ளிய வாலிபர்!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
sadasivam salem

 

வாழப்பாடி அருகே, மனைவியுடனான தவறான தொடர்பை கைவிட்டு விடும்படி பலமுறை கூறியும் கேட்காததால், மனைவியை வைத்தே அவருடைய ஆண் நண்பரை கணவர் தீர்த்துக்கட்டியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (40). விவசாயி. சொந்தமாக இரண்டு டிராக்டர், ஒரு ஜேசிபி இயந்திரம் வைத்து, வாடகைக்கு விட்டு வந்தார். இவருடைய மனைவி பரிமளா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 


நேற்று முன்தினம் (ஜூன் 21) நள்ளிரவு, திடீரென்று வெளியே சென்றுவிட்டு வருவதாகச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.


இந்த நிலையில்தான், அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் அடியில் குப்புற படுத்த நிலையில், சதாசிவம் சடலமாகக் கிடப்பது குறித்து தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, அவருடைய இரு கைகளும் பின்பக்கமாக கட்டிப்போடப்பட்டு இருந்தது. கை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை வேறு ஓர் இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு, சடலத்தை பாலத்தின் அடியில் வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது. 


இதுகுறித்து ஏத்தாப்பூர் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில், பெண் விவகாரத்தில் சதாசிவம் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.


வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (37). இவருடைய மனைவி பவித்ரா (24). இவருக்கும், கொலையுண்ட சதாசிவத்திற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. 


இவர்களின் நெருக்கத்தை அரசல்புரசலாக தெரிந்து கொண்ட ரஞ்சித்குமார், இருவரும் உடனடியாக தொடர்பை விட்டுவிடும்படி எச்சரிக்கை செய்தார். ஒரு கட்டத்தில் பவித்ரா, குடும்பத்தின் நலன் மற்றும் கணவரின் மிரட்டலுக்கு அடிபணிந்து, சதாசிவத்தை சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனாலும் சதாசிவம், ரஞ்சித்தின் மனைவியை சந்திப்பதை தொடர்ந்தார்.


இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், சதாசிவத்தை தீர்த்துக் கட்ட தீர்மானித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த தனது உறவினரான குமார் (34) என்பவரின் உதவியை நாடியுள்ளார். 


கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரஞ்சித்குமார், தனது மனைவியையே பகடைக் காயாக பயன்படுத்தினார். அதாவது, மனைவியை வைத்தே சதாசிவத்தை உடனடியாக தன் வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார் ரஞ்சித். அதை நம்பி ஆசையுடன் சதாசிவம் அர்த்த ராத்தியில் பவித்ராவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி வீட்டுக்குள் ஒளிந்திருந்த ரஞ்சித்குமாரும், அவருடைய நண்பர் குமாரும், அவரை மடக்கிப்பிடித்து கைகள் இரண்டையும் கயிறால் பின்பக்கமாக இறுக்கிக் கட்டிப்போட்டு, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.


அதன்பிறகு, அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். சடலத்தை வீட்டில் வைத்திருந்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து அவர்கள் சடலத்தை அருகில் உள்ள பாலத்தின் அடியில் வீசிவிட்டுச் சென்றுவிட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


இக்கொலை தொடர்பாக ரஞ்சித்குமார், அவருடைய மனைவி பவித்ரா, நண்பர் குமார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.