Skip to main content

எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு! சேலம் வாலிபர் கைது பின்னணியில் பரபரப்பு தகவல்கள்!!

Published on 02/06/2018 | Edited on 02/06/2018

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு போஸ்டர் வடிவமைத்து வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்ததாக சேலம் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டியைச் சேர்ந்த சுந்தரம் மகன் விஜயகுமார் (28). அந்தப் பகுதியில் சொந்தமாக செங்கல் சூளை வைத்திருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி வாட்ஸ்அப் செயலி மூலம் அவதூறு கருத்துகளை பரப்பியதாக தம்மம்பட்டி காவல்துறையினர் திடீரென்று நேற்று அவரை கைது செய்தனர்.
 

விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் ஸ்ரீகுமரன் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.
 

இதுகுறித்து நாம் விசாரித்தபோது வேறு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கடந்த மே 22ம் தேதி, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர். அந்த சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக அப்போது சிலர், அரசுக்கு எதிரான கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.

 

vijayakumar


அந்த வகையில் வந்த அவதூறு போஸ்டரை சமூக ஊடகங்களில் பரப்பியது விஜயகுமார்தான் என்ற புகாரின்பேரிலேயே அவரை தம்மம்பட்டி காவல்துறையினர் கைது செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கடந்த மாதம் 26ம் தேதி கொடுக்கப்பட்ட புகாரில், சாவகாசமாக நேற்று கைது நடவடிக்கை மேற்கொண்டதிலும் உள்நோக்கம் இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.
 

கைது செய்யப்பட்ட விஜயகுமார், தற்போது திமுகவில் உறுப்பினராக உள்ளார். உண்மையில், அவர்தான் இந்த போஸ்டரை சமூக ஊடகங்களில் பரப்பினாரா? அல்லது எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் இத்தகைய அடக்குமுறைகளை கையாள்கின்றனரா? என்ற சந்தேகங்களையும் சிலர் கிளப்பி உள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” - அருண் விஜய் புகார்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
arun vijay complaint against you tube channel

அருண் விஜய் கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அருண் விஜய், பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது தனது குடும்பம் குறித்து தனியார் யூட்யூப் ஒன்றில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த அருண் விஜய், அதனால் தனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். 

Next Story

‘அப்பா நான் வீடியோல தெரியுறனா’ - நொடிப்பொழுதில் பறிபோன மகிழ்ச்சி; மனதைக் கணமாக்கும் சம்பவம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

குழந்தைகள் கண்முன்னேயே பெற்றோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவர்கள் குளிப்பதற்கு முன்பு எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்துள்ள குழந்தை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜனார்த்தனன் - பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும், மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் சென்ற ஜனார்த்தனன், அங்கிருந்து மேலப்பாறை பகுதிக்கு சென்றுள்ளார்.

 

குழந்தைகள் இருவரையும் ஒரு பாறையில் அமர வைத்துவிட்டு மனைவியுடன் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார். அதற்கு முன்பாக தனது குழந்தைகளை நீர் குறைந்த அளவில் இருக்கும் பகுதியில் இறக்கி நீச்சல் அடிக்க விட்டு வீடியோவாக பதிவு செய்தார். அப்பொழுது அவரது குழந்தைகள் 'அப்பா நான் வீடியோவில் தெரிகிறேனா' என சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

அதனைத் தொடர்ந்து குழந்தைகளை பாறை மேல் மேலே அமர வைத்துவிட்டு ஜனார்த்தனன், பவித்ரா ஆகிய இருவரும் ஆற்றில் இறங்கி குளித்த பொழுது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். இதனை கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் கதறி அழுதுள்ளனர். அவர்களது அழுகுரலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்க ஆற்றுக்குள் இறங்கினர். ஆனால் அதற்கு முன்பாகவே ஜனார்த்தனனும் அவரது மனைவி பவித்ராவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவர்கள் ஆற்றில் குளிப்பதற்கு முன்னால் எடுத்த அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.