Skip to main content

 ஏற்காட்டில் இளம்பெண் மர்ம சாவு; ஆட்சியர் அலுவலகம் முன் உறவினர்கள் சாலை மறியல்!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 


ஏற்காட்டில், திருமணமான ஐந்தே வருடத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, கணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

k


சேலம் மாவட்டம் ஏற்காடு கோயில் மேட்டைச் சேர்ந்தவர் டேவிட். இவருடைய மகன் செல்வக்குமார் (25). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கரிஷ்மா. இவர்கள் இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.


இந்நிலையில், ஜூலை 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் செல்வக்குமாரின் குடும்பத்தினர் கரிஷ்மாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி அவரை, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சேர்த்த சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

k


இந்நிலையில், கரிஷ்மாவின் பெற்றோர் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக காவல்துறையில் புகார் அளித்தனர். அவருடைய தம்பி நவாஸ் தலைமையில் உறவினர்கள் திங்கள்கிழமை (ஜூலை 15) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடக்கும் என்பதால், ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க ஏராளமான பொதுமக்களும் வந்திருந்தனர். இந்த நிலையில் கரிஷ்மாவின் உறவினர்களும் அங்கே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


காவல்துறை உதவி ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து போகுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணமாகி 7 ஆண்டுக்குள் கரிஷ்மா மரணம் அடைந்திருப்பதால் இதுகுறித்து கோட்டாட்சியர் நேரடியாக விசாரணை நடத்துவார் எனக்கூறியதை அடுத்து அவர்கள் சமாதானம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 


இதுகுறித்து கரிஷ்மாவின் உறவினர்கள் கூறுகையில், ''செல்வக்குமார் தினமும் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்து கரிஷ்மாவிடம் தகராறு செய்வார். செல்வக்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் தவறான தொடர்பு உள்ளது. 


இது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, கரிஷ்மாவின் தாத்தா இறந்துவிட்டார். அப்போது ஈமச்சடங்கிற்காக வந்தபோது கணவருடன் ஏற்பட்டு வரும் தகராறு குறித்து கரிஷ்மா எங்களிடம் அழுது புலம்பினார். கரிஷ்மாவை, செல்வக்குமார் அடித்தே கொன்றுவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கரிஷ்மாவின் சடலத்தை வாங்க மாட்டோம்,'' என்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.