Skip to main content

சேலத்தில் இளம்பெண் கழுத்து அறுத்து கொலை! கணவனுக்கு வலைவீச்சு!!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

சேலத்தில் குடும்பம் நடத்த வர மறுத்த இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த கணவனை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை கங்காபுதூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் மோகனேஸ்வரி (21). இவருக்கும், அல்லிக்குட்டை அருகே உள்ள மன்னார்பாளையத்தைச் சேர்ந்த கோபி (26) என்பவருக்கும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கோபி, கட்டட வேலைக்குச் சென்று வருகிறார். வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் சிபு என்ற ஆண் குழந்தை உள்ளது.


பெற்றோர் எதிர்ப்பை மீறி ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட மோகனேஸ்வரி, கோவையில் குப்பையாபாளையத்தில் கணவருடன் வசித்து வந்தார். கோபிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

salem women incident husband escape police investigation

 

இந்நிலையில், கணவருடன் கோபித்துக்கொண்டு கடந்த இரு மாதங்களுக்கு முன் மோகனேஸ்வரி சேலத்தில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்குக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். பின்னர் அவர், சேலம் ராஜகணபதி கோயில் அருகே உள்ள ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ் ஜவுளி கடையில் வேலைக்குச் சென்று வந்தார். 


இதற்கிடையே கோபி, பலமுறை நேரிலும், செல்போன் மூலமும் மோகனேஸ்வரியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு மோகனேஸ்வரி ஒத்து க்கொள்ளவில்லை. 


இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) இரவு 9 மணியளவில், மோகனேஸ்வரி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டை நோக்கி அவர் தார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் மறைந்து இருந்த கோபி, திடீரென்று அவரை வழிமறித்து, தகராறு செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. 


ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கோபி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகனேஸ்வரியை கழுத்து அறுத்துக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் துடிதுடித்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதையடுத்து சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு கோபி தப்பி ஓடிவிட்டார். 


இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மோகனேஸ்வரியின் தந்தை ராமலிங்கத்திடம் தகவல் அளித்தனர். அவர், இதுகுறித்து வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 


கடந்த சனிக்கிழமை (நவ. 9) கோவையில் தான் வேலை செய்து வரும் இடத்தில் இருந்து சம்பளத்தை வாங்கிக்கொண்டு, எப்படியும் மனைவியை சமாதானம் செய்து கோவைக்கு அழைத்து வந்து விடுவேன் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு சேலம் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு அவர் மது குடித்துள்ளார். அதன்பிறகே மனைவியை வழிமறித்து சமதானம் பேசியிருப்பதும், அப்போதும் மோகனேஸ்வரி முரண்டு பிடித்ததால் ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. கோபியை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வீராணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.