Skip to main content

வனப்பகுதியில் ஆணுடன் நெருக்கமாக இருந்த பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் கைது!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

வாழப்பாடி அருகே, தவறான உறவுக்கு அழைத்து வந்த காதலனை விரட்டிவிட்டு, இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் அமுதா (32, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் கணேசன் என்பவரும், அமுதாவும் நெருங்கிப் பழகி வந்தனர். கணேசனும் திருமணமானவர். அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து 'நெருக்கமாக' இருந்து வந்துள்ளனர். செப். 16ம் தேதியன்றும் அவர்கள் இருவரும் தனிமையில் 'சந்திப்பதற்காக' நெய்யமலை வனப்பகுதிக்குள் சென்றிருந்தனர். 

அங்கு இருவரும் தனிமையில் 'நெருக்கமாக' இருந்தபோது, வாழப்பாடியைச் சேர்ந்த 6 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்களை மிரட்டிய அந்த கும்பல், கணேசனை அங்கிருந்து விரட்டி அடித்தனர். அதன்பிறகு தனியாக சிக்கிக்கொண்ட அமுதா தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் அந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவருடைய கைப்பையில் இருந்த செல்போன், ஆதார் அட்டை ஆகியவற்றை பறித்துக்கொண்ட அவர்கள், கணேசனுடன் நெருக்கமாக இருந்ததை உன் கணவரிடம் கூறி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். 

அப்படிச் சொல்லாமல் இருக்க வேண்டுமானால், நாங்கள் சொல்லும்படி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினர். அதற்கு உடன்பட மறுத்த அமுதா, அவர்களிடம் இருந்து தப்பித்து சிறிது தூரம் ஓடினார். அதற்குள் அந்த கும்பல், அமுதாவை விரட்டிப்பிடித்து சரமாரியாக தாக்கியது. அவர்கள் அமுதாவை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கிடையே, தப்பியோடிய கணேசன் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு, நெய்யமலை வனப்பகுதிக்கு வந்தார். இதைப்பார்த்த அந்த கும்பல் அமுதாவை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது.

SALEM woman who was close to the man in the FOREST  Arrested for GANG IN POLICE


காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த அமுதாவை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வாழப்பாடி டிஎஸ்பி சூர்யமூர்த்தியிடம் புகார் அளித்தனர். அவருடைய மேற்பார்வையில், வாழப்பாடி மகளிர் காவல் ஆய்வாளர் உமா பிரியதர்ஷினி மற்றும் காவலர்கள் இதுகுறித்து விசாரித்தனர். 
 

இந்த சம்பவத்தில், வாழப்பாடியைச் சேர்ந்த அழகேசன், சேதுபதி, வெங்கடாஜலம், கோகுல், மணிகண்டன், கலையரசன் ஆகிய ஆறு பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களை செப். 17ம் தேதி கைது செய்தனர். அவர்கள் மீது பெண்ணை தாக்கி காயம் விளைவித்தல், மானபங்கப்படுத்தல், பாலியல் பலாத்காரம், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 


அந்த கும்பலிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரும் வாழப்பாடியில் உள்ள நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் வாழப்பாடி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.