Skip to main content

சேலம் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை! வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவு!!

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
bhuvaneswari


சேலத்தில் கணவர், மாமியாரின் வரதட்சணை கொடுமையை தாங்க முடியாத விரக்தியில் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரிக்கரை அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் புவனா என்கிற புவனேஸ்வரி (33). இவருக்கு, பழைய சூரமங்கலம் கபிலர் தெருவைச் சேர்ந்த கவுதமன் என்பவருடன் மூன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

கடந்த 2008ம் ஆண்டு தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலைக்காவலராக புவனேஸ்வரி (காவலர் எண்: 1204) பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரம் போலீஸ் பயிற்சிப்பள்ளியில் பயிற்சியை நிறைவு செய்தார். சேலம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த புவனேஸ்வரி, கடந்த ஜூலை 9ம் தேதி, ஜலகண்டபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

புவனேஸ்வரி கம்ப்யூட்டரில் பயிற்சி பெற்றவர் என்பதால், ஜலகண்டாபுரத்தில் இருந்து சில நாள்களிலேயே சேலம் மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு பணிக்கு அழைக்கப்பட்டார். கணவர், மாமியார் ஆகியோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக சமீப காலமாக பெற்றோர் வீட்டில் இருந்துதான் அலுவலகத்துக்குச் சென்று வந்தார்.

நேற்று இரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இன்று அதிகாலை தந்தை செல்வராஜ் எழுந்து பார்த்தபோது, வீட்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு புவனேஸ்வரி சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகளின் நிலையைக் கண்டு மொத்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணத்தின்போது புவனேஸ்வரிக்கு 25 பவுன் நகைகளும், பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டு உள்ளன. கவுதமன் பி.டெக். இன்ஜினியரிங் படித்துள்ளதால் வரதட்சணையாக 50 பவுன் நகைகள் வேண்டும் என்று திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் கேட்டுள்ளனர். அப்போது, விடுபட்ட சீதனத்தை பின்னர் தருவதாக புவனேஸ்வரியின் பெற்றோர் கூறியதாக தெரிகிறது. ஆனால் சொன்னபடி அவர்களால் வரதட்சணை கொடுக்க முடியவில்லை.

இதனால் மாமியார் தொடர்ந்து புவனேஸ்வரியிடம் பெற்றோரிடம் இருந்து நகைகளை வாங்கி வரும்படி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், மகனிடமும் பேசக்கூடாது என்று தடை விதித்துள்ளார். இதற்கிடையே, அவருக்கு கவுதமனிடம் இருந்து விவாகரத்து நோட்டீஸூம் அனுப்பப்பட்டு உள்ளது.
 

bhuvanes


சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், விவாகரத்து கொடுக்க விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார். ஆனாலும், கணவரை சந்தித்துப்பேச மாமியார் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்துள்ளார். மேலும், எப்படியாவது விவாகரத்து பெற்று, மகனுக்கு வேறு பெண்ணை திருமணம் முடிக்கவும் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட விரக்தியால்தான் புவனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. புவனேஸ்வரி தற்கொலை பற்றி அறிந்த சக பெண் போலீசார் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

சேலம் மாவட்ட ஆயுதப்படையில் புவனேஸ்வரியுடன் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர் கூறுகையில், ''புவனாவும் நானும் ஒரே 'பேட்ச்'தான். ஒன்றாகத்தான் காஞ்சிபுரத்தில் பயிற்சியை நிறைவு செய்தோம். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். நிறைய காமெடியாக பேசுவார்.

பெரும்பாலும் அவர் சொந்த விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார். சில நேரங்களில் சொந்த விஷயங்களைப் பேசியிருக்கிறார். அவருடைய கணவர் வேலைக்கு எதுவும் போகவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனாலும் அவர் மீது ரொம்பவே உயிராக இருப்பதாகவும், மாமியார்தான் கணவருடன் பேச அனுமதிப்பதில்லை என்றும் சொல்வார்.

மாமியார் பணம், நகைகள் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்குமேல் அதைப்பற்றி விரிவாக எதுவும் சொன்னதில்லை. புவனாவின் தங்கையும் பெண் காவலர்தான். அவரிடம் கூட ஏதோ மனஸ்தாபத்தில் பேசாமல் இருந்து வந்தார்.

குடும்ப பிரச்னைகளால் புவனா, அனுமதியின்றி தொடர்ந்து இரண்டு மாதங்கள் விடுப்பில் இருந்தார். அதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய புரமோஷன் கூட கடைசி நேரத்தில் கிடைக்காமல் போய்விட்து. எங்கே, எப்போது பணிக்கு அனுப்பினாலும் சளைக்காமல் பணியாற்றுவார். அவருக்கு சாப்பிடுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். புவனாவுடன் பழகிய நாள்களை மறக்க முடியாது,'' என்று கூறி உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

திருமணம் ஆகி ஏழு ஆண்டுகளுக்குள் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கை சேலம் கோட்டாட்சியர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.